Freitag, 30. Januar 2009

என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க




முத்துக்குமரா,
முதுகுலத்துப் பேரா!

இனமானம் உற்றதை உணர்ந்த உயிரே
மற்றைய வாழ்வென ஒன்றில்லா பொழுதிடை
அறிந்த நீ குறித்தே தீயிடை ஏறி
எரியூட்டினும் தான் உணராதுஎனின்
தமிழாய்ஆனதன் வழி வாழ்வுடை ஆனாய்?

மேனிலை வருத்தி வான்கொடை ஈன
வந்தததோ மனது எமக்கென உதிர
செய் வினை முறிந்து முயங்கப் பெறும்
அகவினைப் பயனாய் ஆனதில்லையே உன்
இருத்தலின் மறுத்தல் ஓம்ப?

பாரதத்துக்கு ஆம் நல் அறம் எடுத்து உரைக்க
உடலுதிர் மனங்கொள் உயிர்க்கொடை ஈத்தந்து
ஈழத்தில் உடை போர் வெடிக்க மாக்கள் உயிர் உய்ந்து அங்குநிலவ
பாரத அடுபோர் தொழில் ஒழிய உனைக் கொண்டாய்
தமிழும் ஆனதன் பயனாய் மேன் இடம் வென்றாய்

வாழ்வொடு நிறைகொள் பதமும் படைத்தாய்
ஓவெனப் புலம்ப இடமும் விலக
உய்ய நிலை இஃதென பகல நீ உடம்பு அழிக்க
யானே அல்லேன் யாவரும் உணர்குவர்
நீ தமிழிடை மறை ஆனதாக

பண்டும் பண்டும் பாழ்வினைச் சிங்களம்
கொடு முறைக் கோன் வழி கொல்லக் கொல்ல தமிழ்
மாக்கள் ஆங்ஙனம் அழிய அழிய
அமிழ்ந்தது அவர் புவியிடை வாழ்வு
கொடுமுடித் தமிழும் புலி வழி அழிய போரிடை ஈழம்

முத்துக் குமாரா முதுகுலத்துப் பேரா!
இத்தனை உலகினுள் உருவந் தொலைத்தவா
அத்தனையும் ஆகி அமர் தவப் பயனன் ஆனவன் நீயே
என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க என் தேச மகள்
கருப் பையில் ஓர் பொழுதினுள் புகுந்து!

ப.வி.ஸ்ரீரங்கன்
30.01.2009
வூப்பெற்றால்.

நிழலோவியம்:இரமணி;நன்றி!

Keine Kommentare:

Kommentar veröffentlichen