Posts mit dem Label இவை மகிழ்ச்சியை விரும்புபவை. werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label இவை மகிழ்ச்சியை விரும்புபவை. werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

போராட்டமே இதன் அழகு

பொழுது கடந்துவிட்டது.


நீண்டகாலமாக
உலகம் தூங்கச் சென்றுவிட்டது.
இன்றைய மேதினப் பொழுதும் கடந்து விட்டிருக்க
நானோ இந்தப் பொழுதில் முடக்கப்பட்டுக் கிடக்கிறேன்!


கணினியை நிறுத்துவதற்குமுன்
நான் அதன் முன் உட்கார்ந்தபடி எதையோ கிறுக்கிறேன்,
தொடர்ந்த தலைவலி,கண்ணைச் சொருகும் தலைச் சுற்று
மூளையின் நரம்பு மண்டலத்தில்
சம நிலையைச் செய்யும் நரம்பில் குறைபாடு.


இப்போது சிந்திக்கிறேன்
நான் கேட்ட வார்த்தைகள்,
எனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்
அனைத்துக்கும் என் நன்றி.


அன்புக்கும்
அங்கீகரிப்புக்கும்
ஆட்சேபத்துக்கும்
என்னை இவை உட்படுத்தியவை
இவைகளின் வழி சிந்திக்கிறேன்
இவை என் அன்புக்கு அவசியமானவை
கவனிப்பு நிறைந்த
நித்திரைக்காழ்த்தும்
பேச்சுக்குரிய இவைகளை இன்றும்...


இவை மகிழ்ச்சியை விரும்புபவை.

போராட்டமே இதன் அழகு
எனினும்,
இப்போது உன் படகோடு
என் தந்தையே
அதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்
என்னால் கை கூடவில்லை.


என்னிடமும்
உன்னிடமும் உலகம் நிறைந்திருக்க
ஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ?


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2007