Montag, 28. Dezember 2009

செங்கதிர் சேகரா!

போர்-"ஆசிரியர்" பெரி-துவக்க...


புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து "உம்பால்" ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
"எங்கணாஅ!"பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
"வருவதோர் துன்பம் உண்டு"
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09

Dienstag, 17. November 2009

எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...

ஊனினை அழிக்க...
 
இன்றென் மூளையை அறுத்து
அவியலிட ஆசை கொண்டேன்
அலுப்புத் தட்டும்போதும்
அருவருப்பு ஏற்படும்போதும்
அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன்
 
முடியவில்லை!
 
எங்குமே எதிரிகளான சூழல்
 
புறமெங்கும் என் சாயலின்
மனிதர்கள் தொலைக்கப்பட்டார்கள்
எனக்கும் சாவுமணி அடிக்க
படையெடுக்கும்"அழகு மேனி"
 
எப்படி வாழ்வேன்?
எதையிட்டு மகிழ்வேன்?
 
என்னைத் தொலைத்த தெருவினில்
என் குழந்தைகள்
தம்மைத் தொலைக்க ஆயுத்தமாகின்றனர்
 
"கருப்பு" எச்சங்கள்
எல்லைப் புறத்தே தள்ளி வீசப்பட்டன
ஏதோவொரு மூலையில் என் இதயம் துடித்தது

என் சந்ததி
தொலைக்கப்பட்ட தம்
மூதாதையரைக் கண்டுகொள்ளவில்லை!
 
ஆங்கிலத்தில்
தனது அடையாளத்தைச் சொல்லிக்கொண்டது ஒரு அடிமை
தொலைந்தது
தானும் தன் சந்ததி என்பதையும் மறந்திருக்க
தெருமுனையில்
தன்னையே துரோகி என்றது இன்னொரு அடிமை
 
எப்படி எழுந்து மீள்வேன்?
 
எவருக்குமே என் சாவு தெரிந்திருக்கவில்லை
எல்லோருமே அதை வரவேற்றபோது
அவர்களிடமிருந்த முகங்கள் தொலைந்திருந்தன
 
எதன்பெயராலும்
எதன் பொருட்டும் என் தாயைக் கற்பழித்தேன்
வாழ்வதற்கு நியாயம் எனக்கு இருப்பதற்கு
 
அவளுக்கு நியாயம் சொல்லும்வரை
நான் அழிந்தே போக வேண்டும்
 
அந்தத் தடையமற்ற பொழுதின் திசையுள்
அவளது இருப்பு
தொடர் இருட்டில் நிலவக் கூடும்
 
அதற்காகவேனும்
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
17.11.2009

Sonntag, 15. November 2009

எல்லோருக்குமான ஒரு வீதியில்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
க்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...


 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 
கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009

Sonntag, 19. Juli 2009

பெனடிக் பதினாறுக்குப் பார்த்து இரங்கு!

கை உடைத்த போப்பும்
கர்த்தராகிய ஆண்டவரும்.
 
 
 
ன் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!
பரலோகத்திலிருக்கும் பிதாவே!!
ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?
விடுமுறைக்கு மெல்லச் சென்றவன்
உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்
பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது
உனக்குப் பொறுக்காதோ?
 
 
நீ,மனிதர்களைவிடக் கொடுமை நிறைந்த
ஏதோவொன்று!
உனக்கே பணிவிடை செய்வதற்காய்
எல்லோரையும் வருத்துவதில்
தள்ளாத வயதிலும் உன்னைச் சொல்லி
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சுகம் தேடும்
உனது தொண்டனைச் சித்திரவதை செய்யலாமோ?
 
 
உனக்குத் தொண்டூழீயஞ் செய்வதைத் தவிர
மீதியான பொழுதில்தாமே
தனது எஜமானர்களுக்கு அந்த அடிமை தொணடூழியஞ் செய்தது!
இதையும் அநுமதிக்க உன்கென்ன குறை?
எல்லோரது தயவுக்கும் தாட்சண்யத்துக்கும்
நீயே பாத்திரமானதாகக் காட்டுவதில்
நீ பொல்லாதவொரு பிறவி!
 




 
பிதாவே,என் ஆண்டவரே!
உன் அடிமைக்கும்-தூதுவனுக்குமான வித்தியாசம் என்ன?
உன்னைச் சொல்லி எல்லோருக்கும் ஆசீர்வாதஞ் செய்பவன்
கையை முறித்துவிட்டத்தில் நீ கொடியவன் கர்த்தரே!
 
 
கால்களில் விழுந்து
கடையர்களாகிய நம்மைக் கடைந்தேற்றக் கேட்கும் நாம்
நீயாகவே கண்டும்,ஏற்றும்
உனது தூதுவனைச் செபிக்கும் என் தலைமுறையை
இப்படி ஏமாற்றலாமோ?
 
 
என் ஆண்டவரே,
பரலோகத்திலுள்ள பிதாவே!
உனது தூதுவனை ஆசீர்வதித்தருள்வாய்!
உன் தூதுவனுக்கே காலைவாரிவிடும் உன்னை
எவரும் நம்பவேண்டுமென்பதற்காய்
வற்றிக்கானில் வாய் நடுங்கும் வயதிலும்
வார்த்தையாடும் உன் தூதுவனை நீ வருத்தலாமோ?
 


 
 
கல் நெஞ்சுக் கர்த்தரே,
கையை உடைத்த உன் தூதுவன்
பெனடிக்கு பதினாறுக்குப் பார்த்து இரங்கு!
 
 
பாதைகளில் தடங்கல்களை வைத்துப்
பார்த்து நடக்கும்படி அவனையும்
அப்பப்ப நீ மனிதனாக்குவதில்
"நீ"
கடவுள்தான் கர்த்தரே!
 
இப்படி எல்லாம்...
கர்த்தரே கனவைக் கலைத்து
மனித நிலைக்குப் போப்பாண்டவரை இறக்கிவிடாதே!
பின்பு
உனக்கான இருப்பு
இந்தப் பூமியில் நிலவுமென்று
கனவு காணாதே கர்த்தரே!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09

Montag, 1. Juni 2009

சிங்களத்து உச்சி பிளந்து...

துட்டக் கைமுனுவும்
எல்லாளனும்.



ந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!

இந்த வார்த்தைக்கு ஒரு நாள் இருந்திருக்கிறது,
அது தனது நாளையும் தொலைத்து
இன்னொரு இரவுக்குத் தவம் இருந்தபோது,
சூரியனின் சரிவில் வீழ்த்தப்பட்ட தலைகள்
வார்த்தைக்குச் சமாதிகட்டிக் கொண்டன.

அந்த வார்த்தைக்குத் தோதான
இன்னொரு வார்த்தை இனி மேலெழுவதற்கு,
வரப் போகும் இரவுகளில் முட்கம்பி வேலிகளில்
கிழிபடும் மனிதம் இடந்தரப் போவதில்லை.

வார்த்தைக்கு விருப்பங்கள் பலதாக இருந்திருக்கிறது,
மற்றவர்களைக் கொன்று வாழ முனையும்
ஒரு திசையில் அந்த வார்த்தை
"தமிழீழம்"என்று எமக்கு அர்த்தமாகியதா?

சிங்களத்து உச்சி பிளந்து
எல்லாளனைக் காட்டிய
அநுராதபுரத்தில் வீழ்ந்த தலைகள் பதினேழு,
வார்த்தைகளுக்கு அப்போதும் ஓய்வில்லை!

மாவீரர் உரை சொல்ல
துட்டக் கைமுனுவின் தலை பிளந்த
வரலாறு தேசியத் தலைவர் திசையில் வார்த்தைக்குப்
பெருமைப்பட்ட புல(ன்)ம் பெயர் புண்ணாக்குகள்.

வன்னிக்குள் மண்டியிட்ட
எல்லாளன் தலை பிளக்கத் துட்டக் கைமுனுக்குக்
கரம் கொடுத்தவர்களும் எல்லாளன் வாரீசுகள்தாம்
வார்த்தைக்கு இப்போது புதுவிளக்கம் சொல்ல




கைமுனுவுக்கும்
எல்லாளனுக்குமாகச் செத்தவர்கள்
அப்பாவி இலங்கைப் பஞ்சப்பட்டவர்கள்
அள்ளிய காசுகளில் அரைக்கு ஒட்டியாணம்
கட்ட முனையும் புலிப்பினாமிகளின் வீடுகளுக்கு
இன்னுமொரு தேசியப் பேயை வார்த்தைகொண்டு விடு!

வார்த்தை தனக்குள்ளே வருத்தல்களைப் புதைத்திருந்தது,
அதுவும் தன்னையும் மற்றவர்களையும் கொன்றபோது
தேசிய ஆன்மாவென்று தெருக் கரையில் நின்று,
அழுதுவடியும் கயவர் வார்த்தைக்குள் வதைபட்டவர்களை
வஞ்சித்து மோப்பம் பிடித்து வயிறு வளர்க்க
இன்னொரு பிரபாகரன் "எல்லாளனுக்கு" இரையாகணுமோ?


ப.வி.ஸ்ரீரங்கன்

01.06.2009


பிற்குறிப்பு:


2007 இன் மாவீரர் தினத்துக்கு உரை சொன்ன பிரபாகரன்,"சிங்களத்து உச்சி பிளந்து" எல்லானை அவர்களுக்குக் காட்டியதாகப் பெருமைப்பட்டார்.அநுராதபுர விமானப்படை தளத்துக்குப் பதினேழு கரும்புலிகள் சென்று தாக்கிய வெற்றிக்கு அவர் சொன்ன உரை அது.இதுள் சிங்கள ஆளும் வர்க்கத்து உளவியல் துட்டக் கைமுனுவின் வரலாறின் வழியிலேயே இயங்குகிறது.அது,வன்னிக்குள் மண்டியிட்ட எல்லாளன் தலையைப் பிளந்து"தேசியத் தலைவர்"தம் கூற்றை எதிர்கொண்டுள்ளதாக இவ் உளப்பாங்கை உணருவேண்டும்.

Samstag, 9. Mai 2009

The silence also is spitefully still.

Deadly Silence

(1)


They go, they come, go and come again,
you're not sure, it seems ever so quietly,
and suddenly in the peace of my songs
again, the siren screams, shrill annoying.


I listen to: whether they are more daring,
my cell is once again threatened?


On those nights, and from those days

will never be anything other than death.




We (Vanni residents) to wait in fear, hesitation and begin
petrifies is to give us the time Graus
and leaves me in previous ones do not escape
and not to the future.


The siren screams.


Are there any "Tamil Eelam" fairy tales, which end happily?
Believe the soul is hard,
often disappointed; comforting legends
lie to my sorrow no more.



It was rejected, what I crave,
and my prayer for peace is not heard.




Soothes and now the siren warns (...),
when they once again reflect the bother?



Crashes from the failure of the bolt down on me
at the moment, but because I want to be happy?
They go, they come, go and come again.
The silence also is spitefully still.

(2)


At midnight the Vanni mother wakes up in her grave.

The old woman has no face. Smell after your bones withered flowers.

In the bare skull to move the glowing eyes.


She uses her head: "I heard you call,Where are you son? "





I lie in the bunker,Mother,
Before my eyes, the death of her rusty spider web tense.
Blood drops of the rain shelter in the Vanni, a string of Sri Lanka!



"Come with me into the grave, son, Protect yourself so that I! "




Bird of the Vanni to disappear without trace in this day

Donnerstag, 16. April 2009

மனிதாபிமானம்

மனிதா
உன் அபிமானம்...



க்களைக் கொல்லு
மக்களைக் கொல்லு
சும்மா கொல்லு,சுகமாய் இருக்கும் நீ கொல்லு!

மனிதாபிமானம் கூடவே கூடாது!

புரட்சிக்கு அது எதிரானது
டோல்ஸ்ரோய்கூடத் துரோகியாகிய
வரலாறு இந்த உலகத்தில்தாம் நிகழ்ந்தது


நீ கூட அறிந்திருப்பாய்
புலிகொல்வது தியாகமென அதன் வால்பிடிகள் அவிழ்க்க
சிங்கம் கொல்வது ஜனநாயத்துக்கு ஆனதென-அதன்
வால்கள் இயம்ப

அந்தோ நீ
இடையினில் அமுதஞ்சுரக்க
நஞ்சுக் கடலைக் கடைவதால்
மக்களது ஆயுட் காலத்தை நீட்ட முடியுமா?
ஆதலால் கொல்லுதலைப் பழகு



மரணங்கள்
கொலைகள் வீழ்த்தும் களங் குறித்து
கவனத்தில்கொள்ளாதே ஆவது பின்னால்
துரோகத்தின் தொடரே!

மனிதாபிமானம் காட்டாதே
புலிக் களத்தில்
போராடிச் சாவது
துரோகம் மறுத்த தியாகமே
கடைசிப் புலியுள்ளவரைப் போராட விடு
இறுதியில் நான் புரட்சி செய்ய!

மருந்துக்கும் சரணடைவைப் பேசாதே-அது
மகத்துவமில்லாத துரோகம்-நீயும்
மக்களைக் கொல்
வேண்டியதைச் செய்
கொலைகளை உனது வீட்டிலிருந்து ஆரம்பி

எனினும்,நீ செய்வது
துரோகந்தாம் ஆனால் அஃது
சிங்கத்தின் துரோகத்தைப் போலன்று
ஏனெனில்
நீ கொலை செய்வதால் புலி
உனக்கான தேவை வேறானது
சிங்கம் பசிமறுத்து வேட்டையாடுவதால் அஃது வேறானது

நீ,பசித்திருப்பதால் புசிக்க
வேட்டையைத் தொடக்குகிறாய்-இது
அடிப்படையில் வேறான அளவுகோலுக்குள் அளக்கப்பட
புரட்சிப் போதனாச் சாலை புகட்டும் துரோகம் இஃது

துணிந்து நில்,
உனது கடைசிச் சகா வீழும்போது-நீ
சைனட்டைக் கையிலெடு
அதுவரையும் உன்னில் தியாகத் தீ எரிகிறது!



உனது கொலைகளுக்கான எனது தீர்ப்பு
துரோகமற்ற தியாகமென்று
நான் மட்டுமே பிரேரிப்பதால்-ஆவது
புரட்சிக்கான புதிய விடியல்

குடிகளுக்குள் வெடியை வைப்பதும்
கூன் விழுந்தவர்களைக்
கட்டாய இராணுவமாக்குவதும்
தியாகத்தைச் செய்வதற்கான தீராத தேசியம்
இது,தமிழுக்கு ஒரு ஈழத்தை அவாவுறுவதே
அதைப் பிரித்தறியும் புரட்சியின் சிறப்பு

தலை வணங்குகிறேன்
உன் துரோகம் மறுத்த தியாகத்துக்காகவும்
பாசிச வாதியாக நீ
இருந்தாலும் உனது புனிதக் கொலைகள்
வரலாற்றில் தியாகத் தீயை மூட்டியே சாம்பலாகும்!

இதனால்
நீயும் தலைவனே!
நீ தியாகி
உனது தியாமெங்கே
சிங்கத்துக்கு வாலாக நீளும்
எச்சில் நாய்களின் துரோகம் எங்கே?

ஆதலால் நாம்
உன் பாதத்தை நக்கி
மோனத்தில் வாழ்வதே
ஈழத்தின் வெற்றி
வாழ்க நீ புலியாக-வாழ்க!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.04.09

Sonntag, 12. April 2009

வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்...

கழுவிய மீனும்,
நழுவிய கையும்.



ந்தர்ப்ப வாதம்,ஓடுகாலி,தப்பித்தல்
கழுவிய மீனில் நழுவிய மீனெனவும்
ஊருக்குள் உருண்டுவரும் மொழிகள் பிளந்து
உன்னையும் கற்கச் சொல்கிறாய்,...ம்!

"சரியோ பிழையோ" தெரியாது,
கருத்துச் சொல்வதும் தப்பித்தலும்
சரளமான தமிழ்ச் சேட்டைதாம்
நண்ப போதாதற்குப் புதைகுழி தோண்டி

செத்துப்போன பிணத்தை இழுத்துப்
புலிப் பாசிச மொழியை வெகுஜனவூடக
மொழிவாகக் கருத்தூன்றாதே, தனக்கு
மூக்கு நீளமெனும் ஒரு வாத்து

மீளத் துயர் விலத்தித் தும்முகிறது
இறுதிவரை பிணங்களாகும் உயிருள்ள
வாழ்வாசைகள் துரோகம் மறுத்தத்
தியாகக் கம்பத்தில் கஞ்சல் சேலையாய்

அழகுக் கோலம், வரலாற்று வெளியில்
கொலுவூன்றிக் கொடி நாட்ட!;
நீ,புதியவனாகச் "சரியானது
பிழையானதென" கூறமுடியாது தவிப்பதாகச்


சொல்வதில் எவரையும் காப்பதற்கில்லையே?
முத்திரைகள் பலவிதப்படும் துரோகி,
எட்டப்பர்,பொறுக்கி,நாய்கள்,உணர்ச்சிவசம்,
இத்தனைக்கும் மத்தியில் இவருக்கும்

அவருக்கும் தனிமனிதப் பழிவாங்கல்
பொருந்துவதற்கு அவரவரொடு கூடப் பிறந்திட்ட
"மக்கள் நலன்" விட்டுவிடாது!,
எல்லோர் கழுத்திலையும் துரோக அட்டைகளைத்

தொங்கவிடும் புலிப் பினாமிகளோ தமக்கெனப்
புரட்சி அட்டைகளை தொங்கவிடச் சொல்வதும்
நியாயமென உரைக்க நீ எதற்கு நண்ப?;
மற்றவர்களுக்கும் அழகான தொப்பிகளைத் தைக்கத்

தெரியும் என்பதற்காய் புரட்சிக் குத்தகை
ஏலமாவதில் எனக்கென்னவோ இலட்சம் புதைகுழிகளுக்கும்
தமிழீழம் கிடைத்துவிட்டதென்ற உணர்வொடு
ஊசலாட்டம்தாம்; உப்பிடுவது அதுதானே எமக்கு?

மனித உயிரை நேசிப்பது இருக்கட்டும் நண்ப
தவறைத் தவறெனச் சுட்டப் புலிக்கொடிக்குள் முகத்தைப்
புதைத்துப் புரட்டுவதற்கும் ஒப்பீடுகள் உனக்கெதற்கு?
உலகம் உருண்டைதாம் அதற்காக அது சிறுபிள்ளைப் பந்தா என்ன?

பருப்பு வேக வைப்பதோ அன்றி
ஓடிப்பிடித்து ஓணான் பிடிப்பதோ அல்ல,
நாம், இலட்சம் மக்களது உருண்ட தலைகள்கொண்டு
பந்து விளையாடுகிறோம்; போதாதற்குப் புரட்சிப் பாடலுடன்!

இப்போது,நீ கூறுவதெல்லாம் மனித நேசிப்புக்கானதென்கிறாய்
இதிலாவது நாணயத்தைக்கொண்டாயானால்-அதற்காகவாவது
விசுவாசமாக நடக்கக் கடவாய், அன்றியதையும்
புலிக்குத் தியாகங் கற்பிக்க,ஏகாதிபத்திய எதிர்ப்புக்

கூறெனவுண்டு இருப்பவர்கள் தலைகளையும் கூறுபோட்டு
அறுப்பதற்குப் பெயர் புரட்சி அல்ல!வேசங்களுக்கு மேடை
கொலைக் களத்தில் என்று எவர் சொன்னார்?சாகடிக்கப்படும்
உயிர்கொண்டு சரணாலாயம் கட்ட நீ எதற்கு?

பிழை சரியெனத் தெரியாது தவிக்கிறாய்,
விரைவில் கற்பதற்கும் காலத்தில் வாழு
மீதியை வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்
உனக்கும் எனக்கும் பாலங்கள் அமைத்து.

ப.வி.ஸ்ரீரங்கன்
12.04.09

Freitag, 10. April 2009

புதை குழிகள் குறித்துப் பாடம்

தமிழீழமும்,
துரோகமும்!



தொப்பி அளவானதாக இருக்கலாம்
அதற்காக முள்முடியைத் தரித்து
அழகு பாப்பவர்கள் தமது செயலை
மற்றவர்கள் தவறெனச் சுட்ட முடியுமா?


ஆரம்பமே துரோகம்
இதுள் புதிதாகவும் துரோமெனப் புடுங்க
புரட்சிக்கான எந்தப் புண்ணாக்கு
புலிகள் போராட்டத்தில் உண்டு?


ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி




இடை வழியில் குவளை ஏந்த
சமாதிகளுக்குப் பின்னால் ஒளிந்தபடி
மேலும் புதை குழிகள் குறித்துப் பாடம்
நடாத்துகிறது புரட்சிக் கோஷ்டி


நீ,கருவினிலேயே குறைப்பட்டுள்ளாய்
அறிந்தவர்கள் உனது தாயினது கற்பத்தில்
உன்னைக் குறித்துப் பேசியதெல்லாம்
தாய்க்கு ஒரு பிள்ளையே ஒழிய


உனது எதிர்காலம் குறித்து அல்ல
நிலாக் காலத்தை நீ தரிசிக்க
விழி உனக்கு இடந்தராதவொரு
அகண்ட விகாரத்தால் நீ மண் தடவிக்


கோலமிட்ட முற்றத்தை அழித்தெறியும்போது
நீ பொறுப்பில்லைதான் கேடு விளைவித்தவர்கள்
உனது முற்றத்தில் கோலம் போடுவதற்கு முன்
உன்னைக் குறித்துச் சிந்தித்து இருக்க


அவர்களது ஆசை இடங்கொடுக்கவில்லை
நீ,கும்மிருட்டில் உலகத்தைத் தரிசிக்கிறாய்
உனது மனமோ உறை பனி வலயத்தின்
கரடியாக அலையவில்லை உன்னை ஈன்றவர்கள்


அங்ஙனம் இருக்கக் கடவரென நீ
உரைப்பதுமட்டும் அவர்களுக்கு எங்ஙனம் கேட்கும்?
அவர்கள் உன்னைக் குறித்தே விசாரனை செய்யாது
தம்மைக் குறித்த உலக அளவுகோலை


நிறுவுவதில் காலத்தைக் கொலை செய்தனர்
உன்னைக் குறைப் பிரசவமாக்குவதற்கு முன்
அட்டைக் கத்தி கொண்ட சேனைகளோடு
கோட்டையைப் பிடிப்பதற்குக் கோவணம் கட்டி


கடல் கடந்து கரச் சேவையில் ஈடுபடலாயினர்
இருப்பதையும் பறித்தவர்கள் உனது சத்திரச் சிகிச்சைக்காக
பொன்னள்ளிக் கொடுத்தபோது அதில் தமது சுமைகளை
உனது முதுகினில் ஏற்ற நீ முதுகெலும்பைத் தானமாக்க நேர்ந்தது





எகலைவன் துரோணருக்காகக் கட்டைவிரலைக்
காணிக்கை செய்தபோது குருபக்தியே அவனுக்கு அதிகமானதாகச்
சொன்னவர்கள் அவனது ஆயுளைப் பறிக்க அவிட்ட
அதே கதையோடு உன்னையும் இன்று காவு கொள்கின்றனர்


உன்னைப் பெற்றவர்கள் உலகைக் கடந்து
ஏதோவொரு சந்தியில் சில்லறை பொறுக்க
இன்னும் குறைப் பிரசவங்களுக்கான கருக்களை
சுமப்பதற்கான விந்துக்களை அந்நியர்களின்


ஆண்மைக்குள் ஒப்பந்தஞ் செய்ய
அதையும் உனது அநுபவத்தைக் கடந்து
இன்றைய துரோகங் குறித்தக் கேள்வி
ஆரம்பமே துரோகமெனும்போது


புதிதாகவும் துரோகம் நீ கற்பனைக்குள்
உந்தித் தள்ளுவதும் புரட்சியென அவிழ்ப்பதும்
குறைப் பிரசவத்தின் கோலந்தன் அழிவை
கோட்பாட்டில் அச்செடுப்பதற்கான முயற்சிதாம்!


ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி...



ப.வி.ஸ்ரீரங்கன்
10.04.09

Mittwoch, 8. April 2009

புலித் தளபதி தீபன்!

உனது இதழில்
மொழியில்லை!


நீ, அடுக்கடுக்காக
வெற்றிகள் குவித்தபோது,
வண்ண வண்ணப் படங்கள் போட்டுப் பரப்புரை.
தமிழீழம் உனது மிடுக்கில்
கொலுவுற்றதாகவும் பலர் நம்பிக் கிடந்தனர் அன்று!

அந்தோ பரிதாபம்!



நீ, உயிரிழந்து
மல்லாந்து கிடக்கும் மண்ணைத் தவிர
இன்று,
உன்னைத் தொட்டுப் பார்க்கக்கூடத்
தமிழரால் முடியவில்லை!

உனது நாமத்தை
உச்சரிக்கக்கூட ஒருவனில்லை,
உப்பில்லாத ஊர் இது!

உயிரோடிருக்கும்போது
உன்னை,
உருபெருக்கக் காட்டிய ஊடகங்களுக்கு
உனது
மரணத்தைச் சொல்லவும் துப்பில்லை.

தூ...

சதிகாரக் கூட்டமே!

நீ, கொலைக் காரன்,
கொடுமையானவன்,
மக்களை வதைக்கத்
"துரோகி"
என்ற ஆயுதத்தோடு அலைந்தவன்!

எனினும்,
சிங்களக் காடையர் இராணுவத்தால்
அடிமைப்பட்ட நாம்
உனது மிடுக்கில் பெருமிதங்கொண்ட காலமொன்று
விழிமுன் தோன்றிச் சொரிகிறது நீராக!!

புரிகிறது!

இயக்கத்தினது நலனுக்காக
எவரையும் கொல்லும்
அந்தக் கொடுமையான தமிழ்மனது
கொல்லப்பட்டவர் குறித்துச் சொல்லாதுதாம்!

துன்பத்தில்,
பங்குகொள்ளாப் பணவேட்டைக்காரர்கள்
பாடையா கட்டுவார்கள்?

மக்களுக்குச் சொல்வதற்குக் கூட
உனது மரணம் விரோதமானதா?

அறியாத நேரத்தில்,
புரியாத களமொன்றில்,
சரிந்ததோ உனதுடல்?

உயிர் துறந்த
அந்தக் கணங்கள்
துரோகிகளென நீ
பலியெடுத்தவர்களது
கணத்துக்கு ஒத்ததாகவா உணர்ந்தாய்?

எத்தனையோ பொழுதுகளில்,
உனது
மிடுக்கை ஏலம் போட்டவர்கள்
தமிழீழத் தேசிய உறக்கத்தில்
உன்னை மறந்திட
துரோகத் தலைமைக்கு
சிரங்கொடுத்த உனது நிலை வீரமா
அல்லது
கோழைத்தனமா?

நினைவுக்காகக்
குறிப்பு எழுதுகிறேன்
அவ்வளவுதாம்!

காலம்,
எப்போதாவது
உன் மரணத்துக்கான தீர்ப்பைச் சொல்லும்.


அதுவரையும்,
உனது
மிடுக்குத் தமிழர்களது
தவித்த மனதுக்கும்,
சிங்களத்துக்
காட்டுமிராண்டி இராணுவ அச்சத்துக்குமான
ஒரு வடிகாலகவே இருந்திருக்கிறது என்றுரைப்பதில்
நான்
எதையும் இழக்கப்போவதில்லை!

நீ,கொடியவனாகவும்,
பாசிச வாதியாகவும் மாறினாய்.
மக்கள் படைத் தளபதியென
உன்னை எங்ஙனம் உரைப்பேன்?

எனினும்,
அமைதிகொள்!
அழிந்து விட்டாய்,
அற்ப அழிவு அரசியலில்
உன் மரணத்தின் தடமே மறைக்கப்பட்டுள்ளது!

மௌனித்த
உனது இதழில் மொழியில்லை,
நீ,
இப்போது தமிழனும் இல்லை,
சிங்களவனும் இல்லை-மனிதன்!

செயலால் இனங்காணும்
உனது உடலுக்குக் "கொலைக்காரன்" எனும் வரலாறு
மனதினது ஏதோவொரு உணர்வுத் தடத்தில்
குறிப்பெடுத்து நெஞ்சைக் கல்லாக்கிறது!


என்றபோதும்,
விழி பனிக்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2009
பின்னிரவு:01:11 மணி

Sonntag, 5. April 2009

இனியொரு பொழுதில்.

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதெனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட

இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?

நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!

என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!

நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!

மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?


பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது

மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!

சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!

சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...

தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!;
இதையும் மறந்திடாதே!

ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09

Sonntag, 29. März 2009

வணங்கா மனிதங் குறித்து...

உடல் கருக்கும் தீ சுட
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்...

மலர்களைக் கொய்தவன் காசு பண்ண
தமிழீழ விடுதலை மனத்தில்
வித்துடலெனச் சொரியும் பூக்கள்
வன்னியில் குவளை ஏந்தும் சா பிணம்
குற்றுயிரைக் கொல்லப்படும்வரை கையிற் பிடிக்க!


தெருக்கள்தோறும்
புலிக்கொடி ஏந்தி
மண்டையில் புலித் தொப்பி வைத்து
மனமெல்லாம் கொலைக்கு இசைந்து
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என...



பிணங்களின் மீது உரிமைகள்
கொடிகளைக் கட்ட
உயிருள்ளோர் செத்தாக வேண்டும்
இனி,அடுத்தவர் எவர்?

அள்ளிக்கொண்டு
அரசியல் செய்யத் தேசியத் தலைவர்
அரு மருந்துண்ணார் அவர்
அடுத்தவர் குழந்தைகளுக்குச் சைனட்டு

தேசமெனுங் கொடிய மனம்
தன் வீட்டுத் திண்ணையுள் வீழ்ந்த
பிணங்கள் எண்ணிப் பட்டுவாடா
பாயின்றித் தரையில் வீழ்த்தப்பட்ட தலைகள்
"தமிழீழத்தின் விடியலுக்கு" முந்திய வித்து


வணங்காத மண்ணும்
தமிழீழம் தாகம் என்பதாய்
கப்பலோடும் எவரெவர் பெயரிலோ


மண் வணங்குகிறதோ இல்லையோ
நீ வணங்குகிறாய்
கொலைகளுக்குத் தியாகமுங் கற்பிக்கின்றாய்


கப்பல் கட்டுவதுமட்டும் மக்களைக் காப்பதில்லை
கொலைக்குமுன் வைத்திருக்கும் உயிர்களை விட்டுவிடு
மக்களைக் காப்பதென்று புலிக்கதை சொல்ல
இனியும் நடேசன்கள் தேவையா?


ப.வி.ஸ்ரீரங்கன்
29.03.09

Montag, 2. Februar 2009

பழியெல்லாம் புலிவடிவில் புவிகொள்ளினும்...

வாழ்வதற்கு
உனக்கென்றொரு மண்,
சாவதற்கு எமக்கென்றொரு மண்!


நான்,எனக்கெனவொரு வேலையை
எடுத்துக்கொண்டேன்,
மனிதனாக இருப்பதற்கு
மனிதர்களின் அவலத்தைப் பாடுவதென.

என் பாட்டியும்,பாட்டனும் மறந்துபோன
காலடிகளோடு விழிமுன் கூனும்போது
என் சகோதரியின் கச்சைக்குள்
குண்டு புதைக்கும் கயவர்களைக்
காலக் குறியொன்றில்
தொங்க வைக்கும் என் பேனா முனை!

மறுமுனையில் இருப்பதெல்லாம்
பாவங்களைக் கலைத்த பொதுமேடை
எனக்குள் குன்றடித்துக் குருதியூற்றைத் திறப்பினும்
நான் என் மனிதத் தன்மையை இழந்து மௌனிக்கேன்.
மனிதனாக இருப்பதே போராட்டமென்றபோது
பேனாவுக்குள் குருதியூற்றப்பட்ட கணங்கள் ஏராளம்
அது சமீபத்தில்கூட...

வரலாறு மறுமுனையிலிருந்து
என்னைத் தாக்குகிறது!
எனது முனையில் அது முடிந்துவிடாது,
நான் எனது முனையிலிருந்து புதிய கதையைத் தொடர்கிறேன்
அது எனது சரித்திரத்தைக் குருதிவிலத்தித் தொடராது,
வழமைதானெனினும் அஃது தவிர்க்க முடியாது.
தோளில் வலிமையில்லை
எனினும்,
நான் முனைவதே காலமிட்ட வினை.

தொடராது எதுவும் முடிவதில்லை,
தொடராதவொரு சூத்திரம் எங்கும் உண்டா?
வெட்டியும் குறுக்கியும் காலத்தை உன்னால் காண்பிக்க முடியுமெனின்
நான் அதுள் குறைப் பிரசவம் ஒன்றை ஏன் ஈன்றுவிட முடியாது?


என்வரைக்கும் இது சூத்திரமில்லை
உயிர்கொண்டு உலாவுதல்,
முடிந்தால் முற்றுப் புள்ளியை உனது எஜமானைக்கொண்டு
நீ இடுவதற்கு முனையலாம்.
எனினும்,எனது இன்னொரு எழுச்சியில்
என்னைவிட வீரியத்தோடு
குரும்பட்டி பொறுக்கும் சிற்றெறும்பு மேலெழும் மகிந்தா மனிதா!

புரிவதற்குக் கஷ்டமில்லை உனக்கு!
நீ,வகுப்பெடுக்க நான் செவிகொடுக்க
மனிதம் புத்தரின் வாசகமில்லை
உனக்குள் ஊடுகொண்டு உழுவதற்கு எனது தலைமுறை தப்பிழைத்துவிட்டது.
இருந்தும் மேலெழும்
புதிதாய் உதிக்குமொரு சூரியன் இன்னொரு பொழுதில்!

பாரதம் பக்கப் பலமாகினும்,
பாகிஸ்த்தான் போர் விமானம் ஓட்டினும்
பழியெல்லாம் புலிவடிவில் புவிகொள்ளினும்
ஈழத்து மனிதருக்கு எவரும் இரங்காதிருப்பினும்
என்னவர் சிதைந்து குருதியாற்றில் இனித் தத்தளித்திடினும்
ஈரமுள்ள மண்ணொன்று அவர்களுக்கு இலங்கையில் உண்டு!

மகிந்தாவோ அன்றி மகாவம்சமோ
இல்லைப் பாரதமோ பாருக்குள் அதை அழித்திட முடியாது!
வாழ்வதற்கு உனக்கென்றொரு மண்
சாவதற்கு எமக்கென்றொரு மண்
இது காலந்தந்த வினையல்ல
உன்னைப்போன்ற கொள்ளையர்கள் செய்த அவலம்.

யோனி அதிரக் குலைக்கப்படும் என் மகள் கூந்தல்
அள்ளி முடிவதற்கு அவளுக்கென்றொரு காலம்
துள்ளி வரும் அவள் யோனி பிளந்து!
மறந்திடதே,வரலாறு உனக்குள் மட்டும் விரியவில்லை.
வா,வந்து உலகைப் பார்!
பாலஸ்த்தீனம் படிப்புத் தருகிறதா?,
ஈராக்கும் இருக்கிறது.

அழித்தவர்கள் கரங்களுக்கு
அள்ளுவதெல்லாம் பொன்னாகலாம்
ஆனால்,
அதுவே ஒரு நாள் அவருக்கும் அழிவாகும்.
நேற்று அவர்கள்,
இன்று நீ,
நாளை எவரோ?

ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
அப்போது,
என் தடத்தில் இன்னொரு உலகம் இருப்பதையும் நீ அறிவாய்,
இழந்ததை நீ மீட்க
உனக்கென்றொரு உறவும் இருக்கக் காண்பாய்.
அது,உலகெல்லாம் விரிந்து மேவுவதையும் நீ உணர்வாய்!

அதுவரை,
நான்,எனக்கெனவொரு வேலையை
எடுத்துக்கொண்டேன்,
மனிதனாக இருப்பதற்கு...

ப.வி.ஸ்ரீரங்கன்
01.02.2009

Freitag, 30. Januar 2009

என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க




முத்துக்குமரா,
முதுகுலத்துப் பேரா!

இனமானம் உற்றதை உணர்ந்த உயிரே
மற்றைய வாழ்வென ஒன்றில்லா பொழுதிடை
அறிந்த நீ குறித்தே தீயிடை ஏறி
எரியூட்டினும் தான் உணராதுஎனின்
தமிழாய்ஆனதன் வழி வாழ்வுடை ஆனாய்?

மேனிலை வருத்தி வான்கொடை ஈன
வந்தததோ மனது எமக்கென உதிர
செய் வினை முறிந்து முயங்கப் பெறும்
அகவினைப் பயனாய் ஆனதில்லையே உன்
இருத்தலின் மறுத்தல் ஓம்ப?

பாரதத்துக்கு ஆம் நல் அறம் எடுத்து உரைக்க
உடலுதிர் மனங்கொள் உயிர்க்கொடை ஈத்தந்து
ஈழத்தில் உடை போர் வெடிக்க மாக்கள் உயிர் உய்ந்து அங்குநிலவ
பாரத அடுபோர் தொழில் ஒழிய உனைக் கொண்டாய்
தமிழும் ஆனதன் பயனாய் மேன் இடம் வென்றாய்

வாழ்வொடு நிறைகொள் பதமும் படைத்தாய்
ஓவெனப் புலம்ப இடமும் விலக
உய்ய நிலை இஃதென பகல நீ உடம்பு அழிக்க
யானே அல்லேன் யாவரும் உணர்குவர்
நீ தமிழிடை மறை ஆனதாக

பண்டும் பண்டும் பாழ்வினைச் சிங்களம்
கொடு முறைக் கோன் வழி கொல்லக் கொல்ல தமிழ்
மாக்கள் ஆங்ஙனம் அழிய அழிய
அமிழ்ந்தது அவர் புவியிடை வாழ்வு
கொடுமுடித் தமிழும் புலி வழி அழிய போரிடை ஈழம்

முத்துக் குமாரா முதுகுலத்துப் பேரா!
இத்தனை உலகினுள் உருவந் தொலைத்தவா
அத்தனையும் ஆகி அமர் தவப் பயனன் ஆனவன் நீயே
என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க என் தேச மகள்
கருப் பையில் ஓர் பொழுதினுள் புகுந்து!

ப.வி.ஸ்ரீரங்கன்
30.01.2009
வூப்பெற்றால்.

நிழலோவியம்:இரமணி;நன்றி!

Samstag, 24. Januar 2009

நிர்மலராஜன்,சிவராமென...

எழுதுகோல்

தோழனே,
துக்கித்திருக்கவும் முடியவில்லை;
துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!
உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்
பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம்.

அழிக்கப்பட்டவர்களில்
ஒருவனாய் ஆனாய்
ஆக்கத்துக்கு நீமட்டுமல்ல
பெயர் குறித்து எழுதமுடியாத அளவுக்குப்
பத்திரிகையாளர்கள் செயலிலிருக்கப் பலியாக்கப்பட்டனர்!

...நிர்மலராஜன்,சிவராமெனத் தொடர்ந்த
இந்தக் கதை பாதாளத்தில்
திசநாயகம்-ஜசீதரனைச் சிறிது சிறிதாகக் கொன்றபடி
உன்னில் படமெடுத்த கருநாகமாக மகிந்தா முகம் விரிகிறது
நாளை இன்னொரு பத்திரிகையாளனைப் பறிப்பதற்கு முன்

வஞ்சகத்தின் வழிகளைக் கண்டு வீதிக்கிறங்காதவர்கள்
வீடுகள்தோறும் மரணங்கள் விழும்
தேசத்தைத் திருடுகிற அந்நியர்கள் ஆட்டிப்படைக்கும்
மகிந்தா குடும்பத்துள் மலிந்தவை எல்லாம் கொலைகளே
மக்களுக்குச் சேவகம் எனும் போதகன்

தேசத்தின் தலையைக் கொய்து வழிந்த குருதியில்
சால்வையொன்றைத் துவைத்துக் கழுத்திலிட்ட கையோடு
போப்பாண்டவர் கால்களில் வீழ்ந்து
கொலைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற முதற்கணமே
உன்னில் பரீட்சையை எழுத

ஒவ்வொன்றாகத் தலைகளை இனியும்
இலங்கை மக்கள் இழப்பதற்குக் கோத்தபத்தைகளும்
பிரபாகரச் சேனைகளும் கோடி தவமிருக்குங் கணங்களை
இரணமான உனது வீழ்ச்சியுள் காண்பதற்கு எவர்
மறுக்கின்றாரோ அவர் கொலைக் களத்தில் இன்னொரு பொழுதில்

காணாமற் போனதை எழுத ஒரு பேனாக்கூட
இலங்கை மண்ணுள் இருக்காது
வெள்ளைவேனும் வேஷ்டிக் கட்டும் கொல்லைப் புறத்திலிருந்து
கொல்வதற்குப் புலிகளென்ன சிங்கங்களென்ன
இரண்டினது கழுத்துகளில் மட்டுமே வெவ்வேறு அட்டைகள்!

ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2009

நீ எனது தேசம்

அது எனது மூஞ்சி.



தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோனே!
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவனல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவன் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழா,
பாதகர்கள் தோழா
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழா!

என் தோழா,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழா?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழா,
தனித்தாடா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையாடா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவனுக்கு-அவளுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவனே-தோழா!
தமிழன் நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வனே!,தோழனே,மருமகனே,சோதரனே
சும்மாவடா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகன்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வன்-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழா!
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழா,
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏனடா நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவனே,
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தமனே!
உணர்வுடையவன் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவனே!
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகன்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகனே!

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழா,
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவனே(ளே)
எனது காதலா(லி),கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.


ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2009

எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்.


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த
நடுநிசிப் பொழுதொன்றில்

வேட்டைக்குப் புறப்பட்ட நாம்
முடித்துவைப்பதற்குள்
மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை
நாளையவர்
எமது காலடியில் எதைத் தேடுவார்களோ
அதை
இரவோடிரவாக எழுதி வைப்போம்

எனது சோதரா,
எமக்கு
எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது?
நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள்
நடாற்றில் முழ்கும் படகை
நானோ
அன்றி உனது விருப்பமோ
தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை
எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

அன்புச் சோதரா,
அறிவாயா இன்னும்?
வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம்
தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில்
ஒன்றைத் தேர்ந்து
எமக்காகத் தண்டவாளங்களை
நட்டுப் பொதிகளை ஏற்றுவோம்

ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம்
தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை
எப்போதோ தொலைத்தாச்சு
இனியும்
கருமை பொதிந்த கோடுகளுக்குள்
அவை உருப்பெறுவதற்கில்லை

மரணக் காவியங்கள்
மலிந்த சவக் குழிகளுக்குள்
மங்காத கனவுகளோடு மல்லுக்கட்டும் பொழுதொன்று
மகா வம்சத்தின் தெருக்கோடியுள்
இனியும்
உனக்காகவோ அன்றி எனக்காகவோ
எவரும் தொடர்வதற்குள்

என் சோதரா,
பாலைவனத்தில் நாடோடிகளாகவும்
அலைகடலொன்றில் தத்தளிக்கும் கள்ளத் தோணி அகதியாகவும்
என்னையோ அன்றி உன்னையோ
ஏதோவொரு தேசத்துக் காவற்படை
கைதாக்கியதில் எமது உயிர் பிழைத்ததாகவும்

பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!

சிலந்தியின் வாய் பின்னிய வலையில்
வீழ்ந்து மீளும் கொசுக்களைக் கண்டாயா?
விட்டில்கள் விளக்கில் வீழ்ந்தபோது
அதுவே தமது
இறுதிக் கட்டமென அறிந்தவையா?

என் சோதரா,
நாம் தூக்கத்துக்குப் போகத்தான் வேண்டும்
ஆடிய விளையாட்டின்
முடிவு நெருங்கிவிட்டது!
நீ
வென்றாயா அன்றி
நான் தோற்றேனோ என்றதற்கப்பால்
எமது மரணத்துள்
உன்னைத் தோற்கடித்த பொழுதொன்றை எவருரைப்பார்?


ப.வி.ஸ்ரீரங்கன்
15.01.2009

புத்தன் தேசத்துக்கு மகிமை

"புது வருஷம்"


உயிர் உதிரும் உடலும் உணர்வுந்துறந் தொதுங்குங்
களத்தில் புதிதாய்ப் புலம்ப வருக புத்தாண்டே, வருக!
தாயும் சேயும் வான்படைக் குண்டாற் சிதையுமொரு தெருவில்
வன்னி விடுவிப்புக் கொடும் போர் துரத்தக்
கொடுங் கோன் முறை அரசு செய் மகிந்தா தமிழாய் உதிர்க்க

தமிழர் இல்லமும் வீழ்ந்தது
இரத்தமும் கொட்டியது
சிதறிய அன்னை விழியில்
ஈக்கள் மொய்த்தன ஒன்றாய்ப் பத்தாய்
இடியாய் நீ கொட்டிய குண்டுகள்

மக்களுக்கானது அல்ல என்பாய்
பயங்கர வாதத்துக்கு எதிர் எனும்
பம்மாத்து இலங்கைத் தேசியத்துள்
என்னைக் கரைக்க முனைகையில்
ஆத்தையின் பிணத்தில் அடுப்பெரித்து

அன்னம் புசிக்க -நீ
அரிசிப் பருக்கை இட்டு யாழ்ப்பாணத்தில்
வடக்கும் தெற்கும் ஒன்றாய்ப் புணர்ந்ததை
ஒப்புக்குரைத்து கிழக்கின் வசந்தம் மீட்டுகிறாய்
ஒத்துக் கொள்கிறேன், வடக்கும் தெற்கும் பிணைந்தே கிடக்கட்டும்!

அதுவே வரலாறு முழுதும் சாத்தியமுங்கூட-இஃது
சரியானதுங்கூடத் தலைவரே!இலங்கைத் தேசத்தின்
ஒப்பாரும் மிக்காருமற்ற தேசியத் தலைவரே-நீ
ஐ.நா.வில் மட்டுமல்ல யாழ்பாணத்துக்கும் தமிழில்
உனது அரசியலை மொழி பெயர்க்கிறாய் வான்படை வழி

தேசத்தின் மொழிகள் இரண்டையும் தெரிந்திருக்கும் தலைவர்
மதிக்கத் தக்கவரே!, மாண்புடையவரே!!என்றபோதும்
காரணமே இல்லாது களத்தில் மட்டுமல்ல
பன்னைப் பாயிலும் கொல்லப்படுவோரைப் பயங்கரவாதிகள் என்கிறாயே?
அடுக்குமா? பிணத்துள் பால் குறித்து ஆய்தலும்

எதிர்ப்பால் வினைபுரிதலுக்குச் சோடிசத்தின் சுகம்
அனுபவித்துக் களிகொள் மனதொடு
தேசத்தின் மகத்துவஞ் சொல்லும் நீங்கள்
தேசத்தைப் புணர்ந்தவருள் அடக்கமில்லையா?
கொண்டையுள் மலர் திணித்திருப்பவர்கள்

யோனியில் சன்னம் புதைத்துக்
காட்சிக்குக் காட்சிப் புணர்வுயர் நெகிழ்ச்சியில்
புண்ணாக்காக்ப்படும் பிணம்கூடப் பால்வினைப் பயனுள்
புத்தன் தேசத்துக்கு மகிமை சேர்க்க்கலாம்
ஆத்தையின் சேலையையுருவி உன்னிடந்தந்து

இலங்கைத் தேசியத்துள் பிணைந்து புணர
எமக்கொன்றும் உன் இராணுவத்தின் அரிப்பு இல்லை-அது
இல்லவே இல்லை!கோவணத்தைக் குடையும்
உன் கூட்டத்தின் பசிக்குப் பண்ணைகளைத் திறந்துவிடு
தெற்குள் திரண்டகொங்கைக்குக் கோவணங்கட்டி

புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும்
மரணங்களும் அப்படியே எமக்கு-எனினும்
புணரும் தருணம் பிணமென்ன
பெண்ணென்ன பேரின்பம் வதைத்தலில் வந்து போகும்-என்
தேசத்துப் புத்தர்களுக்கு இனியும்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008

இலங்கையராய் இருக்க...

என்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவிலங்கையர்கள்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!

கடுமழையில் விழுதுடையும் ஆல்போல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து தமிழ்த்தேசிய அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண் புலி-சிங்கம் வடிவில்!

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்குகொலிக்கும் தமிழ்த் தினாவெட்டு

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஊர்த்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்படு மெல்வுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் இலங்கைத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய?தூ...

2009 ஆவது தேசத்தில்
யுத்தம் தொலைத்துத் தமிழரை
உயிரொடு உலாவவிடத் தமிழ்க் கூத்து ஒழிக
ஓங்குக இலங்கையர் ஒற்றுமை உறவு!


ப.வி.ஸ்ரீரங்கன்

அக்காவாய்க்கூடிப் பிறந்து...

நெஞ்சில் கீறும்
அக்காளின் நினைவுகொண்டு
அஞ்சலிக்கும் தங்கைகள் நாம்!!!


மௌனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை எமக்கு
எத்தனை கதைகளை உனக்குள்தேடிட அக்கா
எங்கள் உறவே, ஒரு வயிற்றுறவே எமைவிட்டுப் போனாயோ
பக்கத்திலிருந்தும் பார்க்கவும் பலன்கூடவில்லையே அக்கா!!!

மீளவும் சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொலைபேசி அதிர அக்காள் போன செய்தி...

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ அக்கா?

நொந்துலர்ந்த இதயங்களோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்ப் பிரிந்தோம்
இன்றோ இருப்பிழந்து நீ உறவறுத்து
இதயம் நோக எம் விழிபனிக்க வைத்தாயே அக்கா!

எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த தோழி நீ!
ஆறுதலைச் சொல்லும்போது அம்மாவை இருந்தாய்
அக்காவாக அன்பு எமக்கு உறவானது,ஐயோ எம் அன்பே!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்க்க
எங்கள் ஊர் ஆறுமுகனும் இல்லை-சிவனே!

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
உன் முகத்துள் எமைக்காண அச்சம் கொண்டோம்
அக்காவாய் உறவுற்ற எம் மூச்சே, காற்றாகிச் சென்றாயோ கடவுளிடம்?

எங்கள் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்
அவளுக்கு வயசாகி விட்டது நித்தியத்தை நாடிவிட்டாள்
வந்தவிடத்தில் நாட்கள்விலத்த
எங்கள் கட்டைகளையும் நீ கூட்டிச் செல்லேனடி சோதரி
போகப் போவதுதானே உண்மை,நீ போய்விட்டாய்!

எல்லாம் இழந்த இந்த இருட்டில்
அக்காளின் நீண்ட உறக்கஞ் சொல்லும் சேதியோ
மூச்சையடக்கும் ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
உனது உயிரின் இழப்பில்
எமது உடல்களும் இந்த உலகத்தைவிட்டு?...

மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய அக்காவாய் அன்று
உணர்வுக்குள் கோடி கதைகளை வைத்த அக்காள் நீ
சொல்லாமற் போனாயே சோதரி!,சோர்ந்து போனது எங்கள் மனங்களும் அறிவாயோ?

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாய்களோடும்
உணர்வு மரத்த மனங்களோடும்
இதயங்கள் நோக உனக்காக அழுது மடியும்
"ஒரு உயிராய"; நாம் புலம்ப நீ எங்கு போனாய்?

அக்காவாய்க்கூடிப் பிறந்து
அம்மாவாய் ஆரத்தாலாட்டியவளே நின்
ஆன்மாவுக்கு ஆறுதலும்
நித்தியத்தோடு நீ நிம்மதியாகவும் இருக்க
நீண்ட பிராத்தனையோடு நெஞ்சு வலிக்க இறைஞ்சுகிறோம்.


கண்ணீர் மல்க உருகும்,
உன் ஆசைத் தங்கைகள்.

தேச விடுதலை.

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை

மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு
அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால்
பிழைத்துக் கொள்வார்கள்
வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று

விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே
நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள்
இருள் கவிந்துவிடுமாயின்
தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு

கடிப்பதற்குச் சயனைட்டும்
குடிப்பதற்கு ஆற்று நீரும்
உன்னைக் காத்திருக்கும்
நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும்

நெடிய வானம் உனக்கான தேசத்தை
தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு
தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு
தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை

கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து
வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம்
மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக
விழிகளால் பேசிவிடு

ஓ...நியாயமற்றவர்களே!
ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள்
உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்?
அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை

ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால்
எவருக்காவும் எதற்காகவும் நீ துப்பாக்கியைக் களையாதே
மரிப்பதற்குத் தயாராகி விடு
மரிப்பதனால் நீ விடுதலையைப் பெற்றுவிடுகிறாய்

விடுதலை அகவல்

விடுதலை அகவல்

(நேரிசை வெண்பா)

நெற்றிப் பொட்டில் மஞ்சள் கட்டி
நெரிப்பிலிட்டு நீறாக்கி
நேற்று வைத்த நேற்றிக்கடன்
நெஞ்சுக்குள்ளே நினைவகற்றி

நெருப்பாய் போனது தெருவோரம்
ஊரானாலும் அழிந்து தேசம் பிறக்க
தேற்றிய கதைகள் நேற்றுவரை
பொய்மை விழுங்கிப் புடம் போட

போனது,போனது உயிருயிராய்
போற்றும் தலையும் தரைகிழித்துச் சுழியோட
புகழும் தளபதி படைவிலத்த
பழிக்கு நிற்கும் பிஞ்சுகளின்

உயிரினைப் பறிக்கும் சிங்களமும்
நாளும் சரியும் தலைகொண்டு
நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி
போரிடும் தாய்மண் என்றாக

சீண்டிப் பார்க்கும் சிறுகூட்டம்
சேனை கொண்டு அறுவடைக்குப் போனோர்
ஆண்டுகள் கண்டும் நாடடையார்
விடிந்தும் வீடுவரா வேளாண்மை

வேறு:

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்

கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்

மேடுடையான மேன் மக்கள்
மேகத்துள் சொர்க்கம் காட்டிக்
கண் பறித்துச் சித்திரம் காட்ட
'அழகென்ன அழகு' என்பர் ஈழத்தவர்!

வேறொடு வேறு:

அதுவல்லத் தேசம் இதுவல்லத் தேசம்
ஆண்ட பரம்பரை மீள ஆளுந் தேசம்
தமிழீழ மது தாயினும் மேல்
தமிழெமது உயிரென்பாய்

தாகமும் அதுவே என்பாய்
தாயினது உடலம் வீழ்ந்தது
தந்தையும் வீதியில் வீழ்ந்தான் என்றோ
தனயர்களும் தாங்கிய போராயுதம் சரியத்

தலை சாய்ந்தார் கிழக்கொடு வடக்கிலும்
மடிப்பிச்சை எடுப்பேன் இறையே
இனியிவர்க்கு மாவீரர் வாழ் மண்ணும் வேண்டாம்
மக்களைத் துடைக்கும் கோனும் வேண்டாம்

கோவணம் இல்லை
குடியிருக்க ஊரும் இல்லை
கோயிலும் இல்லைக் குளமும் இல்லை
சுருங்கிய இரைப்பைக்கு ஈழம் எதுவரை?

புலிவழி கோன் முறை அரசு என்பாய்
குறைவில்லாத ஈழம் என்பாய்
ஒருவர் இருக்கும்வரை ஓங்கும் போரென்பாய்
அவரும் அழிய ஆவது என்ன என்பேன்?

வேறிலும் வேறு:

மகிந்தா மனிதர் என்றும்
தமிழருக்கு மேய்ப்பன் என்றும்
மகிழ்ச்சியாய் ஏற்பாய் எலும்பை
அதையும் புனைவாய் விடுதலை என்று

நெடுங்குருதி சொல்வாய்
நினைவையும் நெருங்குவாய்
நேற்றையதில் தமிழ்த் தலைமைiயுயும் காண்பாய்
அழிபவரை மறந்த மனதொடு அழிந்தவர் பற்றி

அவரவருக்கு ஆள்வது அவசியம்
குறிச்சி,வட்டாரம்,கோட்டம்
மாவட்டம்,மாகாணம்,மாநிலம் என்ப
மண்ணுக்கு எல்லைகள் வகுப்பாய்

கிழக்கொடு "ஜனநாயகம்" குந்த
கூலிக்குக் கும்பம் வைப்பாய்
குடியிருக்கப் பாரீஸ்சில் பங்களா கேட்டாய்
கொடுத்தவர் கொள்கை வீரர் கருணா-மகிந்தா மாமா


வேறிலும் வேறான வேறு:

வா வேந்தே வா,நீ "ம்..."கொட்டியவன்!
மார்க்சைக் கூட்டிவா மகுடி வாசிப்பார்
ராகவனை அணைத்துக்கொள் கூத்தடி,கதையாய்ப் புனைகொள்
ஏடாக்கு, நேற்றுக் கோட்டையைப் பிடித்தவர் நாம்

பேட்டையைக் கட்டுவதா சிரமம்?
நீ இருக்க எனக்கேது கவலை!
நினைத்தபடி இரு கல்வெட்டொன்று இனியும் வேண்டாமென
நேற்றைய நீயும் நாளைய நானும் என்றாய் உலகம்

பெண்ணியமா வேந்தே?நீலி,அந்தரி
செங்கண் அரவு பிறையுடன் பிணைந்த
ராஜேஸ் அக்கா இரவகற்றும் புரட்சி மடந்தை
நிர்மலமும் நீறாய் நெற்றியில் பூசு

வல்லவன் நீ
கொல்பவர்களைச் சொல்லியே
கோலம்போடு உலகமெங்கும்
கூப்பாடுகொள் பின் நவீனமாக

குடியிருப்புகளுக்குள் கலைத்தல்
அமைப்பைக் குலைத்தலுக்கு அவசியம்
குந்தியிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பி
அடுப்படிக்குள் சாம்பலையும் வையாதே!

தலித்துப்பாட்டு மடை:

தண்ணிமுதல் தெரிவை தாகங்கொண்டு
மதிப்புக்கு மறுப்பறிக்கை பகர்க
குடிமனை உழந்த மாதரை நோக்கி
"உடலுறவில் திருப்தி"பற்றிக் கேட்டுவை

கடுமனது கொண்டால் சிரித்துவிடு
கனிவொடு மௌனித்தால் மடக்கு
இரவொடு தலித்துவம் பேசி வை
உனக்கா இது சொல்ல?

இடிதரும் வெடியும் நீ
கடி தரும் கொங்கைப் பாலும் நீ கேட்பாய்
குடமொடு பொழியும் மடந்தை
குழைவினில் குளிர்பவன் என்ப

குருவே,கோசுகனார் கொம்பே!
"வேளாளன் சாதி நீக்கிப் பிரகடனஞ் செய்க"வென
தலித்துவத்தின் விளக்க வரிவுரையே
மலர்பொதி அவிழ்த்த மாண்பே நினது பெருமை சொல்ல?

நெடுங்குருதி மருவி
விரிவிடை செரிவு காண
அருவிய செழு நீர்க் கமலத்துள்
நீந்தப் பெருந்தவப் பயன்கொள்-இதுவே தலித்தியம்


நிறை:

தெரிநிலை தேற்ற மையமுற் றெண் சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.



01.08.2008

சிங்கள இனவாதம்

நெடுங்குருதி சொல்லும்
நீயும்-நானும்.

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்
இடப்பட்டவொரு வெளியில்
ஈழம் இருண்டுகிடக்க

பேருரைகள்
ஆய்வுகள் அவசரத்தில்
நீதி பகிர்ந்து...

தொடருகிற யுத்தக் காண்டம்
உடலங்களில் எண்ணிக்கை வைத்து
ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டை
சிங்கக் கொடியால் பிணைத்தபடி
புலிகொடிக்கு நெருப்பிட்டு மகிழ்வதும் தொடர்ந்தபடி

கொடிகள் எரிக்கப்படலாம்
ஏற்றப்படலாம்
கம்பத்தில் மனிதம் தூக்கப்படுவதை
இனவொற்றுமை சொல்லியும்
ஜனநாயகஞ் சொல்லியும்
ஈழ விடுதலை சொல்லியும் நீ நியாயப்படுத்துவதை
இத்துடன் நிறுத்து!

ஒரு போரை
இன்னொரு போரால் நியாயப்படுத்தி
ஓரத்தில் நிற்கும் நீயோ
இலங்கையின் கருப்பு ஜுலை நெடுங்குருதிபற்றி
எல்லோருக்கும் வகுப்பெடுக்கிறாய்

அன்று
அடியாட்களை ஏவிய சிங்கள இனவாதம்
இன்று
உலகமகா ஜனநாயகக் காவலரின் ஆயுதங்களைக் காவி
தேசியக் கொடியைத் தமிழர்களின் பிணங்களின்மீது ஏற்றியபடி


இனப் பிரச்சனைக்குத் தீர்வு
நன்றாகவே புகட்டுகின்றனர்!

எனதுடலின் உயிரைக் குடிக்கும்
மிருகக் கொடிகளுக்குள் மறைந்துகிடக்கும் சாத்தான்கள்
புவிப் பரப்பில் வேதம் ஓதுகின்றன இலங்கைக்குச் சமாதானம் சொல்லி

கிழக்குக்கு ஜனநாயகம் கொணர்ந்த வக்கணையுள்
மகிந்தாவின் மண்டைக்குத் தொப்பி தைப்பதற்கு
நீ
ஸ்டாலினைக் கூட்டிவந்து ஒருமைப்பாட்டைச் சொல்லலாம்
அல்லது
மார்க்சைக் கூட்டி வந்து"இதுதாம் மாங்காய்"என்று
மந்திரஞ் சொல்லலாம்
ஆனால்
தொடரும் நரவேட்டையின் மந்திரக் கோலை
தேர்ந்தெடுத்த அரசுகளுக்காய் விட்டபடி

இதற்குள்
பிட்டுக்கு மண் சுமந்த
சிவன்களாகப் பலர் நமக்குள்ளும்
நித்தியாய்
நிர்மலாவாய்
ராஜேசாய்
ராகவனாய்
ரஞ்சித்தாய் வஞ்சித்து நெடுங்குருதி காணலாம்

வஞ்சித்தே வழக்கப்பட்டவர்களோ
அன்றுகொண்ட வேஷங்களின் கலைப்புக்கு
இன்றுவரை மருத்துவஞ்(சுய(...)விமர்சனம்) சொல்லாதவர்கள்
இன்று
வழிகள் அனைத்திலும்
பெரும் பொறிகள் அமைத்து
தெருவெங்கும் முகமூடியணிந்த முனிவர்களாக
நெடுங் குருதியாற்றில் அமிழ்ந்து தியானித்துக் கொல்(ள்)கிறார்கள்!

புலிக்குப் புசிப்பதற்கு மாவீரர்களும்
சிங்கத்துக்குப் புசிப்பதற்குத் தமிழர்களும் சிங்களவர்களும் மரித்துக்கிடக்க
ஸ்ரீராமச்சக்கரம் விரைவாகச் சுற்றிக்கொள்ளும்
இவ்விரண்டு மிருகங்களுக்கும் சேர்க்கஸ் வகுப்பெடுக்க

இனியென்ன?

செத்தவர்களைச் சொல்லிக்கொள்
ஞாபகப்படுத்திச் சில வினாடி மௌனித்துக்கொள்
இலங்கைக்குள் சமஷ்டி
மாகாணம்
மாநிலம் என்றும் மந்திரம் ஓதிக்கொள்
ஆனால்
ஸ்ரீலங்கா அரசை மட்டும் பகைத்துவிடாதே!

இன்னொரு பொழுதில் நீ அறுவடைக்குப் போவாய்
இருப்பவர்களின் உயிருக்கு உலையும் வைத்து
உனக்கான எலும்பை எறிந்துவிடும் ஸ்ரீலங்கா
சிரித்த முகத்துடன்
தமிழருக்கானவொரு புதைகுழியை
நீ
மாகாணங்களின் பெயர் சொல்லித் தோண்டிக்கொள்வாய்!

இதுதாம்
இன முரண்பாட்டுக்கான "தீர்வுப்பொதி"-இதுவரை நீ செய்ததும் இதுவே.


நாளை நன்றாகவே
நெடுங்குருதிக்குள் சமாதானத்தைப் பேண்
நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும்
தமிழரெனும் நாமத்துடன்
நன்றாகப் பேருரையை எஜமானரின் ஒப்புதலோடு இன்றே எழுதிக்கொள்
அப்போது
நீயே நமது மேய்ப்பன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.2008
இரவு மணி:00:34

கருப்பு ஜுலை

கண்ணுக்குள் வட்டமிடும்
பெற்றா-புறக்கோட்டை!
ஐ.பி. ரஞ்சன்
என்
சித்தப்பன் சிவராஜா
அவன் நிறுவனம்:
"பீப்பிள் ரேட் அன் சப்பிளைஸ்"

1983 ஜுலை 23.

சில நூறு பிணங்களைக்
கண்டேன் பெற்றாவில்!

சுருவில் சண்முகம் கம்பனியின்
இறக்குமதி-ஏற்றுமதி விண்ணன் சுந்தரலிங்கத்தை
ஜுலைக் கலவரம் தார்ப் பிப்பாவில் திணித்தபோது
நான் பூந்தோட்டவீதியில் ரஞ்சனின் ஜீப்பில்
நல்லதோ கிட்டதோ
ஐ.பி.ரஞ்சன் அன்று எனக்கு மேய்ப்பன்!

சில கணத்தின் கழிவில்
சோற்றுப் பார்சலுடன்
சிங்களத் தோழர்கள் மிதந்தார்கள் ஸ்டேஷனில்
ரஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
சோற்றுப் பார்சலுடன் மல்லுக் கட்டிய பொழுது
ரத்கம ஸ்டோர் முதலாளிக்கு
அந்து ஊர்ப் பெயர் காத்தபோது
நாலு கோடி சொத்து எஞ்சியது இந்தக் கலவரத்துள்!

எனது அப்பனின் தம்பிக்கு
அந்தளவுகோடி தீயில் அமிழ்தது!


இன்னும் நெஞ்சில் வடுவாக அந்த நாள்.

நீ, மரணத்தைத் தியானித்துள்ளாயா?

சில முஸ்லீம்கள்-தெரிந்தவர்கள்
சிங்களவர்களாகத் தார்ப்பார் ஆடியதை
அன்று அனுபவித்தவன் நான்
கட்டுப்பத்தையில் பெட்டி சுமந்தவர்கள்
ஞானத்தின் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தார்கள்
என்னோடு புத்தகஞ் சுமந்தவர்கள் எதிரியாகிப்
போட்டுத் தாக்கியபோது
நானும் புரண்டேன் தமிழனென்பதால்

என்ன கொடுமையடா!
அன்றைய ஜுலையை நினைவு கூரும் நானோ
இன்றும் பல ஜுலையை எனது தேசமெங்கும் விதைத்தபடி
புலம் பெயர்ந்து எண்ணிக் கொள்வதில்
விமோசனமும் உண்டோ?

இன்றும்,
இதயத்தைத் தீனியாக்கும் அந்த ஜுலை 23!
ஜே.ஆர். மிக அழகாகத் திட்டமிட்டான்
பிரமதாசா நடாத்தி முடித்தான்
லீலாக் கலாண்டரின் சின்னத்துரை
மைந்தர்களோ பிரமதாசாவின் பேர்சனல் லோயர்கள்...

சுந்தரலிங்கம் மாண்ட கையோடு
அவன் தம்பி என்னை விடுவித்த நாலாம் மாடிக் கைது நினைவில்...

டினோஷன் ரேடிங் கம்பனியும்
லீலா சின்னத்துரை மகன் தனபாலாவின் தயவில்
இன்று எதையோ எழுதுகிறேன்.

ஜுலையின் வலி பெரியது

நான் அனுபவித்தவை...


நடு இராத்திரியில்
எனது மலக் குழியில் செலுத்தப்பட்ட
பொலீசின் ஆண்குறியின் தடிமனால்
எனது வலியும் ஜுலைதான்


கொல்லப்பட்டவர்களில் பலரை எனக்குத் தெரிந்தது
கொன்றவர்கள் பலரை நான் முஸ்லீமாக இனம் கண்டதும் உண்டு
எதற்கொடுத்தாலும் அழிந்தது ஒரு சமுதாயம்

என்னை ஒடுக்கியபடி
நான் ஓரத்தில் மௌனிக்கலாம்
வரலாறு மௌனித்தால்
எனக்குள் நெருப்பு எரியும்
தேசத்திலும் ஒரு இனம் எரியும்
இதுதான்
1983 ஜுலை 23.


ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.2008

தேச காளியின் நீட்டிய நாவு

சமாதிகளுக்கு
இனியும் இடம் உண்டா?

உண்மை
உருக்குலைந்த புயற் பொழுதொன்றில்
உப்புச் சட்டிக்குள் வெள்ளம்
உளிகொண்டு
உப்பகற்றும் என் முனைப்புக்கு
இருட்டுப்பட்ட திசையொன்றில்
வெளிச்சம்

கக்கத்தில் சொருகிய இரும்புடன்
காலில் கிடக்கும் புண்ணுக்குப் புனுகு தடவுதலும்
தேசத்துக்குக் காவடி தூக்குதலும்
வழமைக்கு மாறாக இன்னும் தொடரும்
என் நெற்றிப் பொட்டில் கொடியேற்றி

ஒட்டிய புன்னகையும்
ஒடிந்த உடலும்
மீட்சியிழந்து குற்றுயிரில் தவிக்க
மீண்டுமொரு சந்தில்
மிதிபடக் காத்துக்கிடக்கும்
சில மண் புழுக்கள்
தமிழுக்காய் பொங்குகின்றன

எனக்கிருக்கும் வரம்பற்ற ஊக்கத்துள்
வக்கீலாகப் பலர் உள் நுழைய
என் கச்சைக்குள் கறையான்கள் அரித்தபடி
வீட்டுக்குள் அறுவடைக்காக
அம்மாளுக்குப் படையல்

தேச காளியின் நீட்டிய நாவுக்குள்
உள் நுழைந்த இலையான்கள் சில
தொண்டைக்குள் தீபந்தம் ஏந்துகின்றன
தெருவிலிருக்கும் தெருலாம்பு
கரகாட்டம் செய்யும் புயற்காலம்
இத்துடன் அமிழ்ந்து போவதாகப் பத்திரிகைச் செய்தி

இதற்குள்
படுத்துறங்கிய தாத்தாவுக்கு
நாவுக்குச் சுவையாக
எச்சில் கனவொன்று நீண்டபடி
கனாக்காலம் விலகிய மண்ணிலோ
வினாக் காலம் பிறந்து
பிரளயம் தாண்டவமாடுவதாக
உப்புப் போராட்டம் ஓங்கிச் சொல்கிறது

உனக்கான காலம்
ஓரத்தில் புரண்டது போதும்
ஒற்றைக் போரில்
ஆயிரம் முடிச்சவிழ்க்கும்
தேசத்தில்
எனக்கும் பின் உனக்கும்
சமாதிகளுக்கு இனியும் இடம் உண்டா?


ப.வி.ஸ்ரீரங்கன்
18.07.2008

என்னென்ன கூத்துக்கள்...

தமிழீழக் குடை


தமிழீழத்துக்கான
"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்
வர்த்தகத் தேசியம்
ஆதரவு இருந்ததனாற்றான்
தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்
இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்
தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி
குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது!

தமிழைச் சொல்லியே
தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"
ஆதரவைக் காட்ட
நீ,
அழகான தமிழிச்சி
அமுகிப் பிடிக்கும்
அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு!

கோரிக்கைதான் இது


கொம்பு முளைத்த
தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்
செய்வித்துத் தரும் குடைக்களும்
தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட
தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்
தமிழீழத் தாகம் மட்டுமல்ல
அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்
தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி
வர்த்தகத்தில்"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!


இதுவும்,
தேசத்தின் விடிவுக்குத்தான்
பல்லிளிக்கும் உடலும்
பகட்டான உடையும்
பக்கா வியாபாரம்
தேசியத்தின் பெயரில்


தூ...
பெண்ணுரிமை
தேசியம்
விடுதலை
தமிழீழம் சுயநிர்ணயம்
குப்பைகளைச் சொல்லியே
கோபுரங்கள் கட்ட
தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

தமிழையும்
தமிழச்சிகளையும்
ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்
இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது
தேசிய வர்த்தகத்தில்

இதுவும் அதன் வினைப் பயனாய்...


இன்னும்
என்னென்ன கூத்துக்கள்
இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்
நமக்கு விடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்.
20.06.2008

கொல்பவர்களைக் காட்டு நீ

தெருமுனைகளும்
தேசத்தை ஏலம் போடும்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்வென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது

எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உருமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியல் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய



21.06.2008

தந்தையுமாகி நின்று

எந்தையும்
தாயும் எனத் தொடர...


"இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்"
இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி
இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில்
இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்?

காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து
காவிச் செல்லு என் கண்ணீரை
கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு
அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய்

தந்தையுமாகி நின்று
தமிழ் செய்யும் எனது மனதில்
நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு
தர்க்கத்துள் நிலைக்காத உறவில்

என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்!
பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க
காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு
நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய்

தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும்
தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும்
போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான்

நிலவொடு வானம் பொருந்தும்?
முகிலொடு பொழிவு நள்ளும்
புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும்
அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய்

தக்கதே செய் என்பாய்
தகமையாய் வளர்க என்பாய்
தாயினும் மேலாய் இருந்தாய்
தந்தையே எனக்கும் ஆனாய்!

இன்றோ என் சொல்லுக்குச் சுகமுமில்லை
நீ இல்லா நினைவுக்கு உருவமுமில்லை
கனத்த உணர்வினுள் கண்ணீரொடு மோதும் நான்
கண்ட மாத்திரத்தில் நீ காலமுமானாய்?

மாமுனி மனையோடு மருவிய கால வெளியொன்றில்
விழி எறிந்து வரவுக்காய் நான் மிதந்த பால்யம்
பக்குவமாய் பொத்திய புதுவுணர்வுக்கு நீ உறவென்றாய்
உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

மைத்துனர் முறைமையால் மனதுடைந்து
மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம்
நேற்றைய நினைவுமுறிக்க
நீ நெடுந்தொலைவில் நிற்கக் கண்டேன்!

"கெட்டேம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர் இடத்து ஏகி நிற்பவே"என்பதும் அறிவாய்

இற்றையில் வெம்பி வெந்தழுது வீங்கி நிற்கும்
நினைவுடை நெஞ்சுகொண்டேன்
உற்றது உறவென்பாய் அற்றது அறமுமின்றி
அழிவது இயல்பென்பாய், அர்த்தமும் ஆசானாய் ஆனவனே!

முற்றத்து வாழை குலையீந்த
முத்தனும் பெண்டிரும் கூத்தாட
மெத்தமும் நித்தம் இது தொடர
அந்தமும் ஆதியும் பொய்த்திருக்க

எந்தையும் தாயும் எனத் தொடர
சிந்தையில் சிறப்புடை சேர்த்த நினைவிடை
நெஞ்சறி நன்றி நானுரைக்க-என்
இதயத்துள் எங்கோ நிறைந்திருப்பாய்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
13.05.2008

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?

குத்தகைக்கு எடுக்கப்படும் யுத்தம்!


தேசத்தின் "வட-தெற்கு" இருமுனையிலும்
யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம்
ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம்
இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது
"யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில்
மறுபுறம்,
மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்!

எவருக்குத் தெரியும்
தாய்மையின் பிரசவ வலி?
சுருங்கக் கூறிவிடலாம்,
சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்
சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்
சிலகாலம் உயிர்த்திருக்கும்
மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக

பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் ப+க்கொண்டோட
பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி
தேசங்கள் தேவ தூததர்களின் தயவில்
இரும்புகளைக் காவித் திரிவதில்
மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி
புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும்

எலிக் கறியுண்பவன் தேசம்
சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில்
அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி
இலங்கையின் இறைமையை ஏந்தி
பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்"நடாத்தும்

யுத்தக்களத்தில் போராளிகளின் மன நிலையையும்
விசாரித்து வைக்கும் சில ஊனத்துப் பிறவிகள்
"விடுதலைப் போராளிகளும்"ஜந்திரமான கூலிப்படையாய்
மெல்ல மாறியதான சாட்சியாய் விரியும் அந்த விசாரிப்பு!

அன்றுமின்றும் குண்டுகள்தான் ஓடுபிரித்து உயிர் கொல்லும்
இப்போது"தேசிய விடுதலையும்"ஓடு பிரிக்கும்,
ஒடுங்கிய சிறுசுகளை அள்ளிச் செல்லும்
சில ஆயிரம்
"டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்" என்ற
புதிய பதிவு தொடரும் பெட்டிகளாய்!

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?
தவித்துப் போவது தாய்மை மட்டுமல்லத் தேசமும்தான்!
தட்டிப் பறித்த சில்லறைகளுக்குப் பதிலாக
உலகம் உயிர்களை எண்ணிக்கொள்ள முனைகிறது
யுத்தின் பெயரிலும்
உணவுத் தேவையின் பெயரிலும்
இங்கு ஒழுங்குற இயங்கும் வியாபாரம்

என்றபோதும்,
எனது நெஞ்சில்
"இறுதிப் போராளி உள்ளவரை
விடுதலைப் போர் தொடரும்"ரீல் விடும் காலம்


மலந் துடைக்கும் காகிதங்களாய் தாய்மையின் வலிகள் ஒதுங்கும்
வறுமையில் அவளது உயிரோ ஊசலாடும்
நம்பிக்கை மட்டும்"பெட்டி"வரும்வரை
மகவுகளின் உடலில்
உயிர் நிலைத்திருக்கும் கனவை விதைத்தபடி...


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.08

வா புத்தாண்டே

வா புத்தாண்டே!
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குறுவிழி காண் மரணம்
கருமனங் கொண்ட இருள்
சுருங்கு நட்பறியா இதயம்
மூன்றுங் காணிடம் மறைக

பூவும் புகையும் பிணைவுறும்
நோவும் சாவும் கொண்ட ஈழம்
போரிடை கருகும் நெஞ்சும் நிலமும்
பாரிடை இனியும் வேண்டாம்!

தேரும் திரி வடமும்
மோரும் முது கையும்
பாலும் பசுவும்
மண்ணும் நெல்லுமாக பொலிக ஈழம்

செம்பு நீரும் செம் மண்ணும்
கோலந் தரும் முற்றமும்
பொங்கற் பானையும்
திசை பார்த்த சரிவும் நிறைக தமிழர் இல்லம்


மைவிழி மகளிர் நீராடி
தாவிக் கூத்தாடித் தமிழ்பாட
நிலமகள் மதித்து நிமிர
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குலமுதற் கிழத்தி
குடிமுதல் உழவன்
மண் வளத் தேட்டம்
மலர்ந்த பொழுதாய் வா புத்தாண்டே

பாற் சோறு வேகும்
தரும் கைகள் வலுக்கும்
கொடுங் கோன் மறையும்
வான் கொடை வளரும்

கண்மாய் நிறையும்
மண்வாய் திறந்து
மணிமுத்துப் பெருகும்
மழலைகள் தவழும்

மண் வினைப் பயனால்
மண்ணுடையான் தழைக்க
நெடுமாரி சூடி
குக்கிராமம் கூடிய பொலிவில் சிறக்க

தெருவெல்லாம் கூடும்
திசையெல்லாம் கேளீர்
நமக்கு இனி அழிவு இல்லை
வா புத்தாண்டே வயலும் வயிறும் வாழ்த்த!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008
பின்னிரவு:0,35

விலகுங் காலம்

புத்தாண்டே,வருக!


மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
நொருங்கிய இதயம்
குறை வயிறு

குந்தியிருக்கும் கொட்டில்
குளமான முற்றம்
எச்சில் மிதக்கும்
கழிச்சல் கரையும்

இது எங்கள் வாழ்வு
எழுதாத சட்டமும்
எழுதிய சட்டமும்
எங்களைக் கெடுக்கும்
எருவான வியர்வை
பயன் கொண்ட வாழ்வு எவருக்கோ!

பேச்சிலும் மூச்சிலும் முனகல்
முழியிழக்கும் நீரோ
எங்கள் முற்றத்தை நிறைக்கும்
நித்தம் இருண்டு கிடக்கும் தேசம்
தெருவில் ஓடுடன் உழவன்

தேசங்கள் விடியுதுதாம்
உலக வர்த்தகத்தால்!
உப்புக்கும் அவர்கள்
பல்லுக்குக் குச்சியும் அவர்களே செய்வர்
உருப்பட்டது எமது வாழ்வு

விடிவுக்காய் யுத்தமென்று
மடிவுக்காய்த் தொடரும்
மனிதமும் பேசி
மாண்டவர் உடலில்
தூண்டுவர் குரோதம்!

இத்தனைக்கும் மத்தியில்
இன்னொரு புத்தாண்டு
பிடரியில் முட்டும் பட்டுணி மரணங்கள்
பாய்விரித்துப் படுக்க
பாடை கட்டும் பொழுதோடு காலம்
குண்டு காவி கொட்டும் கொடிய விமானம்

பார்போற்றும் புத்தாண்டு
போரொடு புலரும்
பொழுதெல்லாம் குருதி நெடில்
கொப்பளிக்கும் குண்டுகள்
வெட்டப்படும் சுரங்கம்
வெருட்டப்படும் வேலையிடங்கள்
வேள்விக்குத் தொழிலாளி
வேளைகளில் உடல் தொலைத்து...

உருப்பட்டது உலகம்
உருப்படியாய்ப் புலராத வாழ்வு!

உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்

குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியிழந்து தூங்கும்
இத்தனைக்கும் மத்தியில்
வருக புத்தாண்டே,வருக!
வேறு:
மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
எமது கால்களில் நாமே நின்றால்...




30.12.2007

மழலைகளின் மரணத்தை...

குரைக்கும் நாய்!


நாயொன்று இருந்தவிடத்திலிருந்து
குரைத்தபடி கோடுகிழிக்கிறது.
எனது தேசத்தில் குழந்தைகள் போராட வெளிகிட்ட நேரம்
ஏழரைச் சனியனின் நேரம்

தொடர் தோல்வியில்
என் இரத்தம் இலங்கைத் தீவெங்கும் ஆற்றை உண்டாக்கியபடி
தேசத்தின் மடியில் தவழ்ந்த என் புதல்வர்கள்
தாம் நினைத்த காரியத்துக்காகச் சாகிறார்கள்
எனினும்,
என் தேசத்தின் பிதாவுக்குச் சூழலை மதிப்பிடும் தகமையில்லை
இவன் தந்தை
நடந்த புல் சரியாத நன்றியுடை நல்ல மனிதன்
நான்
இவனை"அவனே-இவனே"என்பேன்!

என் தேசம் மரணிக்கிறது
எனக்குள் குருதி உறைகிறது!
நான் பாடிய மாதாகோவில் குருசு மரம்
எனது பிணத்தால் கறை படும் ஒரு பொழுதில்
எனது பிணம்
என் தோட்டத்தில் புதைத்தாகணும்
அதற்காவேனும்
நான் என் தேசத்துக்காக மரித்தாகணும்!

விடுதலை!

வீரியமிக்க என் மழலைகளின் மரணத்தை
நான் தாங்க முடியாது
புலம்புகிறேன்!


"புலிகளுக்குக் கடுஞ் சேதம்"தினக்குரல் செய்தியைப் போடுகிறது!
என் கண்களில் நீர் தாரைதாரையாகச் சொரிகிறது.
இது எனது சுயம்!
என்னை
எனக்கே புரிய முடியவில்லை.


நான் புரட்சியை விரும்புகிறேன்
இதைவிட என் மழலைகளை
தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன்
அவர்கள்
அப்பனாகிய என்னை
அம்மாவாகி என்னைக் கொல்லலாம்
அதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு!

தேசத்தின் கருத்தரிப்புக்குத்
தம்மை வித்தாக்கியவர்கள் அவர்கள்!!!


எனது மரணம்
அவர்களது தியாகத்தின் நீட்சியாகணும்
என் திடமான மரணம் தேசத்தின் வலுவுக்கு வீரியம் சேர்க்க
நான் அழிந்தேனும் அறிவைச் சொல்வேன்
என் குழந்தைகளின் படிப்புக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லை
அவர்கள் பெறும் முட்டைகளில் நான் வெம்பிக் கொண்டாலும்
எனது தேசத்தின் குழந்தைகளின் உயிரின் விதைப்பில்
என்னை இழக்கிறேன்.

புரியாதவொரு புலத்தில் புலம்புகிறேன்
பெற்ற கல்வியில் தேசத்தின் விடிவைக் குறித்து நோகிறேன்
பெரிய கலைகள்,
பெரிய முறைமைகள்,
பெரிய தத்துவம் புரிந்த பொழுதுகள் ஏராளம்!
எனினும்,
என் மாதாவின் வயற்பரைப்பில் மரணத்தைக் கேட்கிறேன்
என் தேசத்தை நிர்மாணிக்கிற தேசத்துக் குழந்தைகளே,
போரிடுவென்று சொல்லேன்!!


கற்றுக் கொள்,
காலத்தை-நேரத்தை!
உனது தியாகம்
தேசத்தின் விடிவுக்கானதாவென்று
நீ
உணர்வதற்காய் கற்றுக்கொள்,கற்றுக்கொள்,
இன்னுமொருமுறை கற்றுக்கொள்!

நாயொன்று இருந்த இடத்திலிருந்து குரைத்தபடி
அது
எனது தேசத்தையும் குழந்தைகளையும் தின்னும் நோக்கில் குரைக்கிறது!
எனது கரங்களில் வலுவில்லை
கல்லெறிந்து வெருட்டுவது எனது நோக்கமில்லை
அதை மண்ணில் புதைப்பதே எனது நோக்கம்


நான்
வெறி பிடித்தவன்!
அறிவின் வெறி,
ஆணவமாய் இருக்காதெனினும்
அந்த வெறி
உலகத்தின் அறிதலை வெற்றி கொண்ட வெறி!!!


குரைக்கும் இழி நாய்
என் முன் மண்டியிடுவதல்ல என் நோக்கு!
அது கொண்ட அரசியலே
அழிவுக்கு வழி என் தேசத்துக் குழந்தைகளுக்கு,
இதை நீ
புரிக!

06.12.2007

நானும் அழிந்தமை

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?


காமத்துக் கொட்டகையிலொரு
சூத்திரக் கனவு
கவித்துவமாக
கனிப் பறிப்பதற்கும்
புசிப்பதற்கும்
பக்குவங்கள் சில பாடங்களாய்...
பாய்(மெத்தை) விரித்தலென்னவோ
"ஏடங்கை நங்கை
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம்
விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை
பார்ப்பனி பாதங்கள்
சூடும்என் சென்னி..."அவளை நொந்து

(...) பாதம் தாங்கிய தலையின்
பின்னிரவுக் கனவின் கடுப்பில்
ஓரவாயுள் உவர்ப்பாய் ஊறிய
ஒரு யுகக் கனவு

அடுப்பில் எரியும்
பட்டமரத்துக் கட்டையாக
விரும்பு என்(அவள்) செந்தாமரையும்
விட்டது மூச்சு
அப்போது,

"எட்டுத் திசையும்
அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரைஅனல்
மாநிலம் ஆகாசம்
பொடியுரியுங் காலத்துப் பொய்வெளிதனிலும்
பொய்யாக் கனவு புணரும் பொழுது
மெய்யா முடக்கு வாதமொன்று
ஒட்டி உயிர் நிலை
என்னும்இக் காயப்பை
பெருங்காய டப்பாவுக்கும்
பெருமையிலாப் எதிர்ப் பால் வினiயுங்
கட்டி அவிழ்கின்ற
கண்ணுதல் காணுமே!"

அக்காப் பாட்டும்
பக்காப் பொருளும்
பல்லுப் படரும்
சொல்லும் அவிழ்க்கும்
சுகம் ஒன்று
சொறி நாய்ச் சிரங்காய்ச் சொறியும் எங்குமெதிலும்

ஏடங்கை நங்கை
உடலெங்கும் தேடும் படிகம்
எடுப்பதும் சுவைப்பதும்
சொல்லிப் புரியாச் சுகம்
வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு நான் வீமன்
வாளுக்கு என் தோழன்
முக்காலமும் உணரும் பெருவெளிப் பாதையொன்றில்
வீழ்ந்தேன் பெருவினையால்

"உடலாய் உயிராய்
உலகம தாகிக்
கடலாய் கார்முகில்
நீர்பொழி வானாய்
முக்காலப் பருவப்பயல்கள்
பாவியாகப் போகவும் துணியும்
விரும்பு செந்தாமரை விடியும்
விரியும் குவியும்
வியர்க்கும் விழிக்கும்
இடையாய் உலப்பிலி!"

அறியாப் பொருளாய் அமர்த்திய
விடலைப் பருப்பு அவியாப் பொழுதில்
எடுப்புப் பற்றிய இடுப்புச் சுகத்துள்
அடையார் பெருவிழி
அண்ணலாய் நானும் நின்றேனே நிமிர்ந்து!

சிற்றிடைச் சீமைச் சிற்பவலையுள்
செருகும் தலையுந் தொலைய
முறியும் கனவும்
கவிழ்த்த ஆண்மையுங் கரைய
கடுப்பாய் உலரும் உதட்டில்
வெளுப்பாய் மறையும் ஆத்தையின் கோலம்

"தானும் அழிந்து
தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்தென்
உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து
மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை
நானறி யேனே?"

நானறிந்தே அழிந்தேன்
நாவின் சுனையுள் நடுங்கிய கன்னி
மோகச் சுவையுள்
மடி வலித்த கணத்துள்
கடைந்தாள் "என்னை"
அள்ளிய பொழுது
அதுவே அழுதது
அலப்புத் தாங்காது.

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?
நெக்குநெக்குள் உருகி உருகி
தொப்புள் வெளியுள்
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
பழந்தாங்கும் முனையுள்
நக்கும்அழுதும் தொழுதும் வாழ்த்தி
செந்தாமரைச் சொண்டில் குந்திய பெருநிலையில்
நான விதத்தால் கூத்து நவிற்றிச்
கொடிபோலும் திருமேனி
கொழுத்துக் கிடக்கும் கொல்லைப் புறத்துள்
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ
என்
இள மேனிச் சிலிர் நங்கை
மென் கொங்கை புணர்ந்தே!

ஓம் சூத்திரா!
காமத்துச் சூத்திரச்
சுகத்தைச் சொல்லிப்
புகுவீர்
மெல்லத் தாண்டும்
தெற்பத்துச் சுகத்துள்
மேனினுடங்கி!


(மோகத்துள்
முக்கி முனகிய பொழுதொன்று:05.10.2007)

ஒதுங்குக ஓரமாய்

அரசியல்சாரா
"என்னை"
அரசியலாக்காதீர்கள்!

"அரசியல் சாராததென்பதும் அரசியல் சார்ந்ததே!"
அரசியலின்றி அணுவும் இல்லை
அதுதரும் ஒளியுமில்லை-அழிவுமில்லை
எப்பெப்ப ஏது எழுதிடினும் இருப்பது அரசியல்தான்
நான் என்பதன் திரட்சியே
உடலின் அரசியலையும்
உளத்தின் அதுசார்ந்த கருவுருவையும்
புற நிலையின் தன்மையே
"நான்"என்பதையுஞ் சொல்லி
எனதென்பதையும் காட்டி
அதுதாண்டிச் செயலையும் தூண்டி
"எப்படியும்"எழுதத் தூண்டுவதால்
அங்கேயும்"அப்பன் அரசியல்"
அமர்ந்திருந்து அழுத்தி
ஐந்து ருபாய்க்கு அப்பம் வேண்டும்போதும்
அரசியலாய் வந்துவிடுகிறது!

பெரியாரியமென்பது
அரசியலற்ற நிலவினது
(ஓ... நிலவின் நிலத்தைக்கூட விற்றிருக்கிறார்கள்,
அதையும் அமெரிக்க "அப்பன்கள்" வேண்டியுமிருக்கு...) நீட்சியல்ல

நீட்டிமுடக்கும் ஒவ்வொரு சொல்லும்
அரசியலின் அடுத்த நகர்வைச் சொல்பவை
"பெரியார்"என்பதே அரசியல்தான்
அங்கேயும் அடுக்கப்பட்ட
ஒவ்வொரு கல்லும் அரசியலை உரிப்பதற்கே

விழிப்புணர்வென்பதன்
உட்புறஞ்செரியும் உருவம் என்ன?
அதைச் சொல்லும் அரசியலும்
நிலவும் அரசியலின் அடுக்குகளுக்கு ஆராவாரம்
அள்ளித் தெளித்து
கக்கத்தில் வைக்கும்"அரசியல் சாரச் செயற்பாடு" என்றும்
அடுத்தவருக்குச் சொல்லும் அவசரத்தில்
"பெரியாரியம்"அரசிலின்றி இருந்தால்
அடுப்பு ஊதவும் அருகதையின்றி
அழிந்தொழிந்து அக்கிரகாரத்து
அடுகளையுள் அள்ளிய சருகாய் கிடந்திருக்கும்!

அறிக!
அரசியலறிவற்று
அரசியல் பேசும்
அன்புநிறை அகப் புரட்சியார்களே-
பெரியாரிய விழிப்புணர்வுப் விழுப் புண் வீரர்களே!!

அரசியலுக்கு
அடித்தளம் பொருள்
அது தரும் வறுமைக்கு
சட்டம் சொல்லுஞ் தனியுடமை
அப்பவும் வரும்
அடக்குவதற்காய் ஆயிரம் படை மதமென்றும்

மண்ணென்றும் மோட்ஷமென்றும்
இப்பவும் சொல்வோம்
"அரசியலற்ற-எந்த அரசிலுமற்றென்னை
உங்கள் அரசிலுக்குள் தள்ளீ
அடக்கப் பார்க்காதீர்கள்"
"பெரியார்" எவரது என்போம்?
அரசியல் அற்றிருந்தால்
மார்க்ஸ்-காந்தி மற்றும் பல புள்ளிகளும்
பாருக்குள் பண்டியாய் இருந்திருப்பர்
அந்த அரசியல் சாராதிருந்தால்!!

பகக்தில் பாம்பு வருங்கால்
படபடக்கும் உணர்வுக்குள்ளும்
பொருள் சார்ந்த எண்ணம் கண்டீர்!
போரிடடும் தருணமே
காரணத்துக் காரியத்துக்கும்
முடிச்சிடும் முன்னைய புரிவில்
மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே!
உங்களைச் சொல்லி"அரசியல்"செய்யும் அரசியலும்
அரசியலில்லை அரசியல் இல்லை(!!!???)

அப்போதெதற்கு நான்
வார்த்தைகளை அடுக்கி
வம்பு பேசுகிறேன்?

அரசியல் சாரா "என்னை"
அரசியலாக்க "ஒரு கூட்டமே" அலைகிறது
அது ஒதுங்குக ஓரமாய் இப்போது
என் "வாடகை" வீட்டுக்கான நிலவரியை கட்டுவதற்கு
நான்
பேரூந்துக்கு "ரிக்கற்" எடுக்கக் காசு இல்லை!!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.10.2007

பலிப்பீடம்.

பலிப்பீடம்.

இருண்டு
மெளனித்துக் கிடக்கும் மேகத்துக்குக்கீழ்
இடித்தொதுங்கும் வவ்வால்
தூங்க மறுக்கும்

உருண்டு
உருவமிழக்கும் உணர்வுப் பொட்டலத்துள்
இருப்பதெல்லாம் வினையும்,வீம்பும்
எஞ்சிக் கிடக்கும் காலத்தையேனும் அறிந்தாபடில்லை
சொற்பத்துள்
இருள் படரும் ஒரு தினத்தைவிட
என் ஆயுள் நீண்டதில்லை


வவ்வாலின் இறக்கையெழுப்பும் ஒலியோ
அத்துமீறிய அதிர்வுகளை உணர்வுக்குள் எறிந்தபடி
இருந்த இடத்தை மறப்பதற்கு
இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்
மரணத்தின் விளிம்பில் குந்தியிருக்கும் முற்றுப் புள்ளி


திரைவிலகும் ஒரு திசை வெளியில்
குத்தியெழும் அரண்ட மொழிவோ
அச்சத்தைத் தந்தபடி
அரவணைத்து ஆறுதலைச் சொல்வதற்கு
அன்னையோ நீண்ட தூரத்தில்
இனி அவள் வருவதற்கில்லை!

எனது
நித்தியங்கள் தலை குப்பற வீழ்கின்றன
நினைத்துப் பார்க்கவே மனது மறுக்கும்
கருமைப் புள்ளியில்
அறுந்து தொலையும் என் ஆணவம்
கடிகார முள்ளில் சிக்கிய உயிரோ
சுழன்றெழும் இன்னொரு பொழுதில் மீளத் தலை குத்தும்

என் தலையில் குவிந்திருக்கும் கறையான்கள்
அரித்துப்போட்ட அமைதிக்கு நாளை கருமாதி
எரிந்தொதுங்கிய சாம்பலுள்
கரித்துண்டாய்க் கிடக்கும் அநாதையுணர்வுக்கு
இன்னொரு பொழுதில்
கணிசமானவொரு உறை கிடைக்கும்


முடமாகக் கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்


எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது


என்னைப் பிய்த்தெறிவதற்கு
பேரங்களோடு கட்டப்படும் சூன்யத்துள்
என்னதான் இருந்திட முடியுமென்பதை
இதுவரை நானோ அல்லது
என் மரணமோ அறிவதற்கு அவசியமில்லை


வவ்வாலின் வாயுள்
சிட்டுக் குருவிக்குப் பலிப்பீடம்


ப.வி.ஸ்ரீரங்கன்
இலையுதிர்காலம்: 2007.