Posts mit dem Label ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் werden angezeigt. Alle Posts anzeigen

Freitag, 12. März 2010

ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்

சாவோலை
கொண்டொருவன்...



க்கள் சேவைதான்
மகத்தானதென்றேல்-அஃது
அமைச்சரெனுங் கருந்தவப் பேறில்
ஆட்காட்டிச் செய் தவம்-கொலையின்றேல்
கொல்வதெனப் போற்றி


ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்
இருப்பிட உப்பிட உறவிடவெனப் பகர
ஒரு பிடி மண்ணில் எல்லாந் தொலைத்த
உயிர்பிடி இனத்தின் வேரறு மண்ணாய்


மேதமை மெய்மை மேலெனச் சொல்லி
வள்ளல் வடிவினில் விடிவெனப் பாடி
வாத்தியார் போக்கில் வந்தது விடுதலை



அட்டைக் கத்தி அவருக்கிருந்தது-இவருக்கு
நெட்டை இரும்பு தோளில் தொங்க
தெருவெல்லாம் வெள்ளம் செவ்வாறாய்ச் சீற
சிறந்தது தமிழர் இல்லத்து முற்றம்!


ஒற்றெரென ஒடுங்கிய ஊரும்
ஓலத்தின் வழி ஏலத்தில் மண் பறிகொள் மேடாய்
உப்பு நீர் சுரக்கும் பனங்காடும் பறி போய்
வந்தார் வனப்பாய் வாயாற விடுதலை அள்ளி


அவருக்கே ஓட்டை அள்ளி இறைத்து
வதையெனப் படேல் வாழ்க நீயும்
வாழிய யாழே வீணை கொண்டு-இல்லை
வீழ்வதும் உனது தலையென வெண்ணி
வீழ்த்து இலட்சம் வோட்டெனக் களவாய்...


வாழ்க அண்ணா வாழிய நீயே!
வருவது பதவி தருவது கரமெனக்
குரலும் ஒலிக்க கொன்றாவது குலத்தை
கோவேந்தர்க்குத் தானம் தருக.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2010