மற்றும் தொடர்பாடு எவன்கொல்"தூக்கு" அறுக்கல்
உற்றார்க்கு உடன்பகை அவை உள்வழி ஆரிய-திராவிட
பற்றா வினையாய் பலபல சூழ்ச்சிகள்
அற்றாய் உழலும் சாணாக்கியனும்
தென் நாட்டு வேந்தாய் இன்று வேடம் புனைந்து
வித்தகர் செய்த விலங்கொடு வீழ்ந்து
மற்றவர் செய்வினைக்கு வீணாய் மயங்கி
பாமரர் மாண்பு அழிதல் காண் நெஞ்சே!
எய்தவர் இருந்து நீடூ நிலை எய்யுமவர்
அம்புக்கு நாண்கள் பலியாய்க் கொடுப்பதென்னே!
பிரதீபாப் பட்டீல்"அம்மணீ" அரிய தருவே
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி "மேடம்"!
ஆரிய வினைபல விதியாலே அன்று சௌவீர புரமும்
இன்று தென்கோடித் பெரும்பற்றப்புலியூர் அண்டிய
தெருவும்வேறு யாக்கை ஆகி நர பலி எடுப்பாயோ?
ஈழமெனப் பொருதல் செய்வினைப் பயனென
கெட்டோம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
கெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து தூக்கிலிட இசைந்து நிற்பவே!
பாளையாம் தன்மை அழித்தும்
பாலனாம் தன்மை கொன்றும் திராவிடக்
காளையாம் தன்மை இகழ்ந்தும்
காமுறும் இளமை விலத்தியும் ஈழமாய் வாழ்ந்து
ஆரியப் பயனுள் நமக்குள் நாம் அழிந்தே போனாம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.08.2011