Posts mit dem Label முடிவுறாத வினைகள் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label முடிவுறாத வினைகள் werden angezeigt. Alle Posts anzeigen

Freitag, 19. August 2011

தூக்கிலிடுங்கள்!

தூக்கிலிடுங்கள்!

ங்கள் அனைவரையும்
என் விழிகளால் பார்க்கிறேன்
என் செவிவழி உங்கள் குரல்களை கேட்கிறேன்
உங்களோடு என் வாயினூடாக உரையாடுகிறேன்
உங்கள் வார்த்தைகள் எனது எதிரொலியாகின்றன

நீங்கள் மறுதலிக்கக் கூடும்
எழுதாத கதைகள் உங்கள் பக்கத்திலே
எழுதப்பட்ட கதைகளாக
புரட்டப்படாத பக்கங்களாக அவை இருக்கும்வரை...



நான் கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்
அவை உங்கள் முடிவுகளைக் கொண்டிருப்பதால்
எனினும்,உங்கள் ஆரம்பத்தை நான் தரிசிக்கிறேன்
பழையனவற்றுள்ளும் புதியனவற்றுள்ளும்!

உங்களை வாசித்து விடுகிறேன்
எகிறப்பட்ட காலத்துள் ஏதோவொரு சஞ்சலத்துடன்
பக்கங்கள் எதையுமே நான் புரட்டாமல்!
எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களை அழித்து விடுவதில்
தேசத்தினது திரண்ட ஞானத்தைத் தரிசிக்கிறேன்

உங்களது செய்கையோடு கூடிய
ஏற்கப்படாத நடாத்தையின்பால்
என் எற்கப்படாத மரணத்தை
உங்களுக்குள் தருவிப்பதில் முடிவுறாத வினைகள்
தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.08.2011