Freitag, 19. August 2011

தூக்கிலிடுங்கள்!

தூக்கிலிடுங்கள்!

ங்கள் அனைவரையும்
என் விழிகளால் பார்க்கிறேன்
என் செவிவழி உங்கள் குரல்களை கேட்கிறேன்
உங்களோடு என் வாயினூடாக உரையாடுகிறேன்
உங்கள் வார்த்தைகள் எனது எதிரொலியாகின்றன

நீங்கள் மறுதலிக்கக் கூடும்
எழுதாத கதைகள் உங்கள் பக்கத்திலே
எழுதப்பட்ட கதைகளாக
புரட்டப்படாத பக்கங்களாக அவை இருக்கும்வரை...



நான் கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்
அவை உங்கள் முடிவுகளைக் கொண்டிருப்பதால்
எனினும்,உங்கள் ஆரம்பத்தை நான் தரிசிக்கிறேன்
பழையனவற்றுள்ளும் புதியனவற்றுள்ளும்!

உங்களை வாசித்து விடுகிறேன்
எகிறப்பட்ட காலத்துள் ஏதோவொரு சஞ்சலத்துடன்
பக்கங்கள் எதையுமே நான் புரட்டாமல்!
எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களை அழித்து விடுவதில்
தேசத்தினது திரண்ட ஞானத்தைத் தரிசிக்கிறேன்

உங்களது செய்கையோடு கூடிய
ஏற்கப்படாத நடாத்தையின்பால்
என் எற்கப்படாத மரணத்தை
உங்களுக்குள் தருவிப்பதில் முடிவுறாத வினைகள்
தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.08.2011

Mittwoch, 17. August 2011

கழுவேறாக் கன்னி_Pratibha Patil

கழுவேறாக் கன்னி

ற்றும் தொடர்பாடு எவன்கொல்"தூக்கு" அறுக்கல்
உற்றார்க்கு உடன்பகை அவை உள்வழி ஆரிய-திராவிட
பற்றா வினையாய் பலபல சூழ்ச்சிகள்
அற்றாய் உழலும் சாணாக்கியனும்
தென் நாட்டு வேந்தாய் இன்று வேடம் புனைந்து


வித்தகர் செய்த விலங்கொடு வீழ்ந்து
மற்றவர் செய்வினைக்கு வீணாய் மயங்கி
பாமரர் மாண்பு அழிதல் காண் நெஞ்சே!
எய்தவர் இருந்து நீடூ நிலை எய்யுமவர்
அம்புக்கு நாண்கள் பலியாய்க் கொடுப்பதென்னே!



பிரதீபாப் பட்டீல்"அம்மணீ" அரிய தருவே
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி "மேடம்"!
ஆரிய வினைபல விதியாலே அன்று சௌவீர புரமும்
இன்று தென்கோடித் பெரும்பற்றப்புலியூர் அண்டிய
தெருவும்வேறு யாக்கை ஆகி நர பலி எடுப்பாயோ?


ஈழமெனப் பொருதல் செய்வினைப் பயனென
கெட்டோம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
கெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து தூக்கிலிட இசைந்து நிற்பவே!


பாளையாம் தன்மை அழித்தும்
பாலனாம் தன்மை கொன்றும் திராவிடக்
காளையாம் தன்மை இகழ்ந்தும்
காமுறும் இளமை விலத்தியும் ஈழமாய் வாழ்ந்து
ஆரியப் பயனுள் நமக்குள் நாம் அழிந்தே போனாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.08.2011

Samstag, 13. August 2011

வஞ்சகக் கள்வர்.

வஞ்சகக் கள்வர்.

றிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென
செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்
தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து
சூரியதேவன் ஆம் எனச் சொல்லி
துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!

பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து
போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க
அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை
முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,
மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...


"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்
சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?
எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!
ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்
அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.

பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்
தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது
இடம் மறுத்து எங்கோ ஏதோவென.
இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற
சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!

ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி
கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்
புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?
பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல
பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென

புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே
திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்
பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்
தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்
பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.08.2011