Sonntag, 9. September 2012
ஓட்டு இரகம்!
Sonntag, 27. Mai 2012
நானே தேசம்,தேசமே நான்!
தேசியப் படையலிட்டேன்
என் தேசக் கன்னிக்கு
அவள் திரண்டு முறுகி வளர்ந்திட்டபோது
என் தேவைக்காக இன்னொரு தியாகத்திற்குத் தயாரகிடும் படி
தேசமக்களைச் சில பிணங்களுடாய்த் திரட்டிக் கொண்டேன்
பால்கொடுத்த மார்புக்காம்பு உலர்வதற்குள்
பிள்ளையைப் பறிகொடுத்த தாயொருத்தி என்னைத் திட்டித் தீர்த்தாள்
வீட்டுக்கொரு போராளியற்ற வீடுகளெல்லாம் நாட்டுக்குத் தேவையற்றெதன அவளுக்குச் சொல்வேன்
என் கிளிதட்டு விளையாட்டில்
ஆத்தை அப்பனையிழந்த அநாதைகளை
அடுத்த வேள்விக்காய் அநாதையென்ற நாமம் தவிர்த்து
ஆசையாய் அன்பாய் தேசியப் பாலூட்டி வளர்த்தபோது
பூனையாய் வந்த சுனாமி கவ்விச் சென்றது.
அறுப்புக்கு வளர்த்த என் கிடாய்கள்
கட்டறுத்துத் தனி வழிபோன பின் நான் மெலிந்து விட்டேன்
என்னைச் சொல்லித் தேசமும்
தேசத்தைச் சொல்லி நானும் இரண்டறக் கலந்து புனிதமானதில்
நான் தொலைத்தது எதுவுமில்லை
என்றபோதும்
மக்கள் இன்னும் என்னைக் காத்தபடிதாம்!
இதுதாம் தேசப்பற்று.
இன்னொரு சுனாமியுள் கைப்பிடி மண்ணாய்க் கரையக் காத்துக்கிடக்குமொரு தேசத்தில்
நான்-நீயென்றுவேறு உரிமையிட
அந்த மாபெரும் அரக்கி விட்டுவிடாள்போலத்தாமிருக்கு.
காடுகளுக்குள் விறகுவெட்டிச் சோறுண்ணும் கூட்டத்துக்கு
புலப்பெயர்வின் புதிய வாரீசுகள் வாலை முறுக்கி
தேசியச் சவாரியிட
சாவதென்னவோ அந்தக் காட்டுவாசிகள்தானே!
நான் மௌனித்திருப்பதால்
எனது குரலாகப் பல வர்ணக் காகிதங்கள் முளைப்பதில்
எனக்கெதுவும் பாதகமில்லை
ஆனால்
என் பெயர் சொல்லிச் சில சில்லறைகள் தாள்களாக மாறுவது எனக்குத்தாம் ஆபத்து.
எதுவும் தெரியாத பொழுதொன்றில்
எனக்குத் தெரிந்து மொழியுனூடாய்ப் பேசுவதொன்றும்
எனக்குக் கடினமானதில்லையென்பதால் இது நோகத்தக்கதல்ல.
என் மொழியின் வீச்சில் உதிருமந்தச் சருகுகளை
இன்று போய் நாளை வாவென்பேன்
அதுவரையும்
பேசுங்கோ அன்புத் தம்பிகளா பேசுங்கோ
அண்ணாவின் அருமையையும்
அந்த ஆத்தாளின் அழுகையையும்
ஒருதட்டில் நெறுத்தபடி.
31.03.2005
வூப்பெற்றால்
ஜேர்மனி
ப.வி.ஸ்ரீரங்கன்
Samstag, 21. April 2012
கஷ்டம் உனக்கு இல்லை:மற்றவர்கட்கு மட்டுமே!
நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு
கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு.
உனது "கடன் பட்ட நெஞ்சு" கலங்கிக் கரையும்போது
உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே
வெறித்துப் பார்ப்பதைத்தவிர
உன்னால் என்ன செய்ய முடியும்?
இருபது ஆண்டுக்கு முன்
தங்கையின் "பட்டப்படிப்பு வெற்றிக்கு" (ப்) பரிசு அளிக்க
கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய்,
சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு!
வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது
கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை!
நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும்
கரைந்து காணாமற் போச்சு!
அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென...

இப்போ, உனக்குக் கடன் தந்த சிற்றி பேங்கோ
உன்னை விட்டு விடுவாதாகவில்லை! நீ,கவிஞனின்
இருபதாண்டு ஏமாற்றையும் கண்டுகொள்ளவில்லை!,
வேண்டியபோது சிரித்த முகங்களை மீள மீள
ஆற்றிலிட்டுக் குளத்திற் தேடுவதாக...
வேண்டியவர்கள் மீளத் தருவதை மறந்தார்.
வேதனைப்பட வைக்கும் வங்கிக் கடனோ
வேலைக்குப் போகும் காரையும் விட்டுவைக்காதவொரு சூழலுள்
வேடிக்கை மனிதராகிறாய் நீ!
வேதனைப்படாதே!
உனக்கென்றொரு காலம் வரும்.
கடன் பட்ட(வங்கியில்) நெஞ்சு காயந்து போகாதவரை
உடல் உழைத்துக்கொண்டிருக்கும்.
உப்பிட்டாய்-நட்பை,உறவை உயிரென்றாய்
பணத்துக்கு முன் இவை செல்லாக் காசென்று
உரைக்கின்ற காலத்துள்உன்னைக் கைவிட்டவர்களுக்கு
என்ன பெயரடா பாட்டாளி?
உழைத்துக்கொண்டு ஓடாகு,
ஒரு நாள் ஓய்ந்து நீண்ட தூக்கத்துக்கு
ஒத்திகை பார்க்கவாவது இந்த உறவுகள்
உன் இதயத்துள் ஏதோவொரு மூலையில்
எதையாவது கிறுக்கட்டுமே!
ஸ்ரீரங்கன்
21.04.2012
Freitag, 19. August 2011
தூக்கிலிடுங்கள்!
உங்கள் அனைவரையும்
என் விழிகளால் பார்க்கிறேன்
என் செவிவழி உங்கள் குரல்களை கேட்கிறேன்
உங்களோடு என் வாயினூடாக உரையாடுகிறேன்
உங்கள் வார்த்தைகள் எனது எதிரொலியாகின்றன
நீங்கள் மறுதலிக்கக் கூடும்
எழுதாத கதைகள் உங்கள் பக்கத்திலே
எழுதப்பட்ட கதைகளாக
புரட்டப்படாத பக்கங்களாக அவை இருக்கும்வரை...
நான் கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்
அவை உங்கள் முடிவுகளைக் கொண்டிருப்பதால்
எனினும்,உங்கள் ஆரம்பத்தை நான் தரிசிக்கிறேன்
பழையனவற்றுள்ளும் புதியனவற்றுள்ளும்!
உங்களை வாசித்து விடுகிறேன்
எகிறப்பட்ட காலத்துள் ஏதோவொரு சஞ்சலத்துடன்
பக்கங்கள் எதையுமே நான் புரட்டாமல்!
எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களை அழித்து விடுவதில்
தேசத்தினது திரண்ட ஞானத்தைத் தரிசிக்கிறேன்
உங்களது செய்கையோடு கூடிய
ஏற்கப்படாத நடாத்தையின்பால்
என் எற்கப்படாத மரணத்தை
உங்களுக்குள் தருவிப்பதில் முடிவுறாத வினைகள்
தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.08.2011
Mittwoch, 17. August 2011
கழுவேறாக் கன்னி_Pratibha Patil
மற்றும் தொடர்பாடு எவன்கொல்"தூக்கு" அறுக்கல்
உற்றார்க்கு உடன்பகை அவை உள்வழி ஆரிய-திராவிட
பற்றா வினையாய் பலபல சூழ்ச்சிகள்
அற்றாய் உழலும் சாணாக்கியனும்
தென் நாட்டு வேந்தாய் இன்று வேடம் புனைந்து
வித்தகர் செய்த விலங்கொடு வீழ்ந்து
மற்றவர் செய்வினைக்கு வீணாய் மயங்கி
பாமரர் மாண்பு அழிதல் காண் நெஞ்சே!
எய்தவர் இருந்து நீடூ நிலை எய்யுமவர்
அம்புக்கு நாண்கள் பலியாய்க் கொடுப்பதென்னே!
பிரதீபாப் பட்டீல்"அம்மணீ" அரிய தருவே
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி "மேடம்"!
ஆரிய வினைபல விதியாலே அன்று சௌவீர புரமும்
இன்று தென்கோடித் பெரும்பற்றப்புலியூர் அண்டிய
தெருவும்வேறு யாக்கை ஆகி நர பலி எடுப்பாயோ?
ஈழமெனப் பொருதல் செய்வினைப் பயனென
கெட்டோம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
கெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து தூக்கிலிட இசைந்து நிற்பவே!
பாளையாம் தன்மை அழித்தும்
பாலனாம் தன்மை கொன்றும் திராவிடக்
காளையாம் தன்மை இகழ்ந்தும்
காமுறும் இளமை விலத்தியும் ஈழமாய் வாழ்ந்து
ஆரியப் பயனுள் நமக்குள் நாம் அழிந்தே போனாம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.08.2011
Samstag, 13. August 2011
வஞ்சகக் கள்வர்.
அறிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென
செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்
தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து
சூரியதேவன் ஆம் எனச் சொல்லி
துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!
பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து
போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க
அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை
முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,
மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...
"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்
சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?
எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!
ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்
அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.
பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்
தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது
இடம் மறுத்து எங்கோ ஏதோவென.
இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற
சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!
ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி
கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்
புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?
பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல
பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென
புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே
திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்
பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்
தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்
பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.08.2011
Freitag, 12. März 2010
ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்
கொண்டொருவன்...
மக்கள் சேவைதான்
மகத்தானதென்றேல்-அஃது
அமைச்சரெனுங் கருந்தவப் பேறில்
ஆட்காட்டிச் செய் தவம்-கொலையின்றேல்
கொல்வதெனப் போற்றி
ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்
இருப்பிட உப்பிட உறவிடவெனப் பகர
ஒரு பிடி மண்ணில் எல்லாந் தொலைத்த
உயிர்பிடி இனத்தின் வேரறு மண்ணாய்
மேதமை மெய்மை மேலெனச் சொல்லி
வள்ளல் வடிவினில் விடிவெனப் பாடி
வாத்தியார் போக்கில் வந்தது விடுதலை
அட்டைக் கத்தி அவருக்கிருந்தது-இவருக்கு
நெட்டை இரும்பு தோளில் தொங்க
தெருவெல்லாம் வெள்ளம் செவ்வாறாய்ச் சீற
சிறந்தது தமிழர் இல்லத்து முற்றம்!
ஒற்றெரென ஒடுங்கிய ஊரும்
ஓலத்தின் வழி ஏலத்தில் மண் பறிகொள் மேடாய்
உப்பு நீர் சுரக்கும் பனங்காடும் பறி போய்
வந்தார் வனப்பாய் வாயாற விடுதலை அள்ளி
அவருக்கே ஓட்டை அள்ளி இறைத்து
வதையெனப் படேல் வாழ்க நீயும்
வாழிய யாழே வீணை கொண்டு-இல்லை
வீழ்வதும் உனது தலையென வெண்ணி
வீழ்த்து இலட்சம் வோட்டெனக் களவாய்...
வாழ்க அண்ணா வாழிய நீயே!
வருவது பதவி தருவது கரமெனக்
குரலும் ஒலிக்க கொன்றாவது குலத்தை
கோவேந்தர்க்குத் தானம் தருக.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2010
Samstag, 6. Februar 2010
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!
வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக்
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!
அன்னை.
எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!
நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
ஏதோவொரு தெருவில் நான்...
சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.
முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல
மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர
அன்னை உயிர் குடித்த
காலனது கதை பகிர்ந்த
மருமகள்:"உடனடியாகப் போன் செய்யுங்க
மாமா"என...

முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்லும் அவள் மகள்-என் உறவுகள்!
அம்மா,உடல் சாய்த்து வான் பார்க்க
இரவல் வீட்டுத் தரையில் இறுதிப் பயணந் துவக்க
துவண்ட என் நெஞ்சு துன்பித்திருக்க
இரவல் அறியாது நாம் வாழ்ந்த மண்போன்றும்,
மனைபோன்றும் அன்னையின் நினைவு
மெல்ல விழியுள் நீர் சுரக்க
சின்னமடுமாதவின் ஒரு கோடியில்
பசுமைகொண்டிருந்த எனது முற்றம்,
சுற்றம் தொலைத்த அன்றைய இடர்முகம்
அன்னையில் மடியில் தவழ்ந்த சோகமென நான்...
அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்
வேடிக்கை மனிதன் ஆனேன்,
வேதனையைச் சொல்ல முடியாத குற்றம்
நெஞ்சினுள் அம்மா மரணத்தைப் புதைக்க
எனது மனைவிவழி உறவுகளுக்கே
அம்மாவின் மரணம் தெரியாது-இதுதான் நான்!
குற்றம்!அம்மாவைப் பார்க்காத குற்றம்
பொழுதெல்லாம் என்னைச் சிலுவையில் அறைய
சுற்றத்தோடு அன்னையின் இழப்பைப் பகிர்வதில்
எல்லையிட்டபோது என்னைத் தொலைத்திருந்தேன்
எனினும்,
பால்யப் பொழுதின் முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில் அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும் அரண்டு போய்
மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப்போன தருணத்தில் அன்னை முகந்தாங்கி
நினைவுத் தடமாக விரிய
பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்
என்ன சொல்வேன்?
அன்னை இனி வரமாட்டாள்.
அவளது இயக்கம் குலைந்துவிட்டது
தோன்றியதன் மூலத்திணிவு இன்னொரு திசையில்
இருப்பு விரிக்க இழப்பு எமக்காக...
புகலிடம்கொண்டு வருசம் இருபத்தி ஐந்து
என் கட்டையும் போய்விடும் இன்னுஞ் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத துக்கம்-இழப்பு?
தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
உயிர்கொண்டலையும் உடலுக்கும் இது பொருந்தும்?
என்றபோதும்,அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு
அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்துகிறது!
பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!
இப்போது,
அன்னையும் அப்பன் வழியில்...
எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!
இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
சின்னமடு மாதாவும் இல்லை அருகில்!
எல்லாம் இழந்த
இந்தப் பொழுதில் அம்மாவின் இறுதி நிகழ்வு
வெப் காமில் பார்த்து விழிபனிக்க
அக்காளினதும் தங்கையினதும் கண்ணீர்க் கோலம்
மூச்சையடக்க,
எனது இறுதிப் பொழுதை மெல்ல அழைக்கும் கால வரைவு!
என் சந்ததியின் தவிப்பில்
என்றோ ஓர் நாள் அழுகி நாறப்போகும் எனது உடலும்
இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில் அன்னையின் சோகம் காவி
அநாதைக் கோலம் கொண்டு விழி வான் பார்க்க
பனிவீழ்த்தும் வானமும் என்னை நகைக்கிறது!
அன்னை.
அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை,
மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவியைத் தின்றது தீயும்!
"ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாமம்,படையாதே!-மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!"என்றான் பட்டினத்தான்
என் அன்னை அங்ஙனம் இருந்தவள்-வாழ்ந்தவள்
மூன்று மையில் கட்டை எனைச் சுமந்து சென்று
வைத்தியம் பார்த்த அவள் கால்கள் கட்டுண்டு கிடக்க
பாடைகொண்ட மோட்டார்க் கார் மெல்ல விலக
அம்மாவும் மறைந்தாள் இப்போ அப்பனைப் போல!
நானோ,அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழக்கின்றேன்.
அன்னை,அம்மாளாச்சியாய்...
ப.வி.ஸ்ரீரங்கன்
Montag, 28. Dezember 2009
செங்கதிர் சேகரா!
புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.

வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?
இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து "உம்பால்" ஏங்கி அழிவலோ?
இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
"எங்கணாஅ!"பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!
கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
"வருவதோர் துன்பம் உண்டு"
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!
ப.வி.ஸ்ரீரங்கன்
28.12.09
Dienstag, 17. November 2009
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
இன்றென் மூளையை அறுத்து
அவியலிட ஆசை கொண்டேன்
அலுப்புத் தட்டும்போதும்
அருவருப்பு ஏற்படும்போதும்
அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன்
முடியவில்லை!
எங்குமே எதிரிகளான சூழல்
புறமெங்கும் என் சாயலின்
மனிதர்கள் தொலைக்கப்பட்டார்கள்
எனக்கும் சாவுமணி அடிக்க
படையெடுக்கும்"அழகு மேனி"
எப்படி வாழ்வேன்?
எதையிட்டு மகிழ்வேன்?
என்னைத் தொலைத்த தெருவினில்
என் குழந்தைகள்
தம்மைத் தொலைக்க ஆயுத்தமாகின்றனர்
"கருப்பு" எச்சங்கள்
எல்லைப் புறத்தே தள்ளி வீசப்பட்டன
ஏதோவொரு மூலையில் என் இதயம் துடித்தது
என் சந்ததி
தொலைக்கப்பட்ட தம்
மூதாதையரைக் கண்டுகொள்ளவில்லை!
ஆங்கிலத்தில்
தனது அடையாளத்தைச் சொல்லிக்கொண்டது ஒரு அடிமை
தொலைந்தது
தானும் தன் சந்ததி என்பதையும் மறந்திருக்க
தெருமுனையில்
தன்னையே துரோகி என்றது இன்னொரு அடிமை
எப்படி எழுந்து மீள்வேன்?
எவருக்குமே என் சாவு தெரிந்திருக்கவில்லை
எல்லோருமே அதை வரவேற்றபோது
அவர்களிடமிருந்த முகங்கள் தொலைந்திருந்தன
எதன்பெயராலும்
எதன் பொருட்டும் என் தாயைக் கற்பழித்தேன்
வாழ்வதற்கு நியாயம் எனக்கு இருப்பதற்கு
அவளுக்கு நியாயம் சொல்லும்வரை
நான் அழிந்தே போக வேண்டும்
அந்தத் தடையமற்ற பொழுதின் திசையுள்
அவளது இருப்பு
தொடர் இருட்டில் நிலவக் கூடும்
அதற்காகவேனும்
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
17.11.2009
Sonntag, 15. November 2009
எல்லோருக்குமான ஒரு வீதியில்...
மக்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...

எல்லாஞ் சரிதாம்!
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009
Sonntag, 19. Juli 2009
பெனடிக் பதினாறுக்குப் பார்த்து இரங்கு!
கர்த்தராகிய ஆண்டவரும்.
என் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!
பரலோகத்திலிருக்கும் பிதாவே!!
ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?
விடுமுறைக்கு மெல்லச் சென்றவன்
உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்
பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது
உனக்குப் பொறுக்காதோ?
நீ,மனிதர்களைவிடக் கொடுமை நிறைந்த
ஏதோவொன்று!
உனக்கே பணிவிடை செய்வதற்காய்
எல்லோரையும் வருத்துவதில்
தள்ளாத வயதிலும் உன்னைச் சொல்லி
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சுகம் தேடும்
உனது தொண்டனைச் சித்திரவதை செய்யலாமோ?
உனக்குத் தொண்டூழீயஞ் செய்வதைத் தவிர
மீதியான பொழுதில்தாமே
தனது எஜமானர்களுக்கு அந்த அடிமை தொணடூழியஞ் செய்தது!
இதையும் அநுமதிக்க உன்கென்ன குறை?
எல்லோரது தயவுக்கும் தாட்சண்யத்துக்கும்
நீயே பாத்திரமானதாகக் காட்டுவதில்
நீ பொல்லாதவொரு பிறவி!

பிதாவே,என் ஆண்டவரே!
உன் அடிமைக்கும்-தூதுவனுக்குமான வித்தியாசம் என்ன?
உன்னைச் சொல்லி எல்லோருக்கும் ஆசீர்வாதஞ் செய்பவன்
கையை முறித்துவிட்டத்தில் நீ கொடியவன் கர்த்தரே!
கால்களில் விழுந்து
கடையர்களாகிய நம்மைக் கடைந்தேற்றக் கேட்கும் நாம்
நீயாகவே கண்டும்,ஏற்றும்
உனது தூதுவனைச் செபிக்கும் என் தலைமுறையை
இப்படி ஏமாற்றலாமோ?
என் ஆண்டவரே,
பரலோகத்திலுள்ள பிதாவே!
உனது தூதுவனை ஆசீர்வதித்தருள்வாய்!
உன் தூதுவனுக்கே காலைவாரிவிடும் உன்னை
எவரும் நம்பவேண்டுமென்பதற்காய்
வற்றிக்கானில் வாய் நடுங்கும் வயதிலும்
வார்த்தையாடும் உன் தூதுவனை நீ வருத்தலாமோ?

கல் நெஞ்சுக் கர்த்தரே,
கையை உடைத்த உன் தூதுவன்
பெனடிக்கு பதினாறுக்குப் பார்த்து இரங்கு!
பாதைகளில் தடங்கல்களை வைத்துப்
பார்த்து நடக்கும்படி அவனையும்
அப்பப்ப நீ மனிதனாக்குவதில்
"நீ"
கடவுள்தான் கர்த்தரே!
இப்படி எல்லாம்...
கர்த்தரே கனவைக் கலைத்து
மனித நிலைக்குப் போப்பாண்டவரை இறக்கிவிடாதே!
பின்பு
உனக்கான இருப்பு
இந்தப் பூமியில் நிலவுமென்று
கனவு காணாதே கர்த்தரே!
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09
Montag, 1. Juni 2009
சிங்களத்து உச்சி பிளந்து...
எல்லாளனும்.
அந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!
இந்த வார்த்தைக்கு ஒரு நாள் இருந்திருக்கிறது,
அது தனது நாளையும் தொலைத்து
இன்னொரு இரவுக்குத் தவம் இருந்தபோது,
சூரியனின் சரிவில் வீழ்த்தப்பட்ட தலைகள்
வார்த்தைக்குச் சமாதிகட்டிக் கொண்டன.
அந்த வார்த்தைக்குத் தோதான
இன்னொரு வார்த்தை இனி மேலெழுவதற்கு,
வரப் போகும் இரவுகளில் முட்கம்பி வேலிகளில்
கிழிபடும் மனிதம் இடந்தரப் போவதில்லை.
வார்த்தைக்கு விருப்பங்கள் பலதாக இருந்திருக்கிறது,
மற்றவர்களைக் கொன்று வாழ முனையும்
ஒரு திசையில் அந்த வார்த்தை
"தமிழீழம்"என்று எமக்கு அர்த்தமாகியதா?
சிங்களத்து உச்சி பிளந்து
எல்லாளனைக் காட்டிய
அநுராதபுரத்தில் வீழ்ந்த தலைகள் பதினேழு,
வார்த்தைகளுக்கு அப்போதும் ஓய்வில்லை!
மாவீரர் உரை சொல்ல
துட்டக் கைமுனுவின் தலை பிளந்த
வரலாறு தேசியத் தலைவர் திசையில் வார்த்தைக்குப்
பெருமைப்பட்ட புல(ன்)ம் பெயர் புண்ணாக்குகள்.
வன்னிக்குள் மண்டியிட்ட
எல்லாளன் தலை பிளக்கத் துட்டக் கைமுனுக்குக்
கரம் கொடுத்தவர்களும் எல்லாளன் வாரீசுகள்தாம்
வார்த்தைக்கு இப்போது புதுவிளக்கம் சொல்ல

கைமுனுவுக்கும்
எல்லாளனுக்குமாகச் செத்தவர்கள்
அப்பாவி இலங்கைப் பஞ்சப்பட்டவர்கள்
அள்ளிய காசுகளில் அரைக்கு ஒட்டியாணம்
கட்ட முனையும் புலிப்பினாமிகளின் வீடுகளுக்கு
இன்னுமொரு தேசியப் பேயை வார்த்தைகொண்டு விடு!
வார்த்தை தனக்குள்ளே வருத்தல்களைப் புதைத்திருந்தது,
அதுவும் தன்னையும் மற்றவர்களையும் கொன்றபோது
தேசிய ஆன்மாவென்று தெருக் கரையில் நின்று,
அழுதுவடியும் கயவர் வார்த்தைக்குள் வதைபட்டவர்களை
வஞ்சித்து மோப்பம் பிடித்து வயிறு வளர்க்க
இன்னொரு பிரபாகரன் "எல்லாளனுக்கு" இரையாகணுமோ?
ப.வி.ஸ்ரீரங்கன்
01.06.2009
பிற்குறிப்பு:
2007 இன் மாவீரர் தினத்துக்கு உரை சொன்ன பிரபாகரன்,"சிங்களத்து உச்சி பிளந்து" எல்லானை அவர்களுக்குக் காட்டியதாகப் பெருமைப்பட்டார்.அநுராதபுர விமானப்படை தளத்துக்குப் பதினேழு கரும்புலிகள் சென்று தாக்கிய வெற்றிக்கு அவர் சொன்ன உரை அது.இதுள் சிங்கள ஆளும் வர்க்கத்து உளவியல் துட்டக் கைமுனுவின் வரலாறின் வழியிலேயே இயங்குகிறது.அது,வன்னிக்குள் மண்டியிட்ட எல்லாளன் தலையைப் பிளந்து"தேசியத் தலைவர்"தம் கூற்றை எதிர்கொண்டுள்ளதாக இவ் உளப்பாங்கை உணருவேண்டும்.
Samstag, 9. Mai 2009
The silence also is spitefully still.
(1)
They go, they come, go and come again,
you're not sure, it seems ever so quietly,
and suddenly in the peace of my songs
again, the siren screams, shrill annoying.
I listen to: whether they are more daring,
my cell is once again threatened?

On those nights, and from those days
will never be anything other than death.
We (Vanni residents) to wait in fear, hesitation and begin
petrifies is to give us the time Graus
and leaves me in previous ones do not escape
and not to the future.

The siren screams.
Are there any "Tamil Eelam" fairy tales, which end happily?
Believe the soul is hard,
often disappointed; comforting legends
lie to my sorrow no more.
It was rejected, what I crave,
and my prayer for peace is not heard.

Soothes and now the siren warns (...),
when they once again reflect the bother?
Crashes from the failure of the bolt down on me
at the moment, but because I want to be happy?
They go, they come, go and come again.
The silence also is spitefully still.
(2)
At midnight the Vanni mother wakes up in her grave.
The old woman has no face. Smell after your bones withered flowers.
In the bare skull to move the glowing eyes.
She uses her head: "I heard you call,Where are you son? "
I lie in the bunker,Mother,
Before my eyes, the death of her rusty spider web tense.
Blood drops of the rain shelter in the Vanni, a string of Sri Lanka!
"Come with me into the grave, son, Protect yourself so that I! "
Bird of the Vanni to disappear without trace in this day
Donnerstag, 16. April 2009
மனிதாபிமானம்
உன் அபிமானம்...
மக்களைக் கொல்லு
மக்களைக் கொல்லு
சும்மா கொல்லு,சுகமாய் இருக்கும் நீ கொல்லு!
மனிதாபிமானம் கூடவே கூடாது!
புரட்சிக்கு அது எதிரானது
டோல்ஸ்ரோய்கூடத் துரோகியாகிய
வரலாறு இந்த உலகத்தில்தாம் நிகழ்ந்தது
நீ கூட அறிந்திருப்பாய்
புலிகொல்வது தியாகமென அதன் வால்பிடிகள் அவிழ்க்க
சிங்கம் கொல்வது ஜனநாயத்துக்கு ஆனதென-அதன்
வால்கள் இயம்ப
அந்தோ நீ
இடையினில் அமுதஞ்சுரக்க
நஞ்சுக் கடலைக் கடைவதால்
மக்களது ஆயுட் காலத்தை நீட்ட முடியுமா?
ஆதலால் கொல்லுதலைப் பழகு
மரணங்கள்
கொலைகள் வீழ்த்தும் களங் குறித்து
கவனத்தில்கொள்ளாதே ஆவது பின்னால்
துரோகத்தின் தொடரே!
மனிதாபிமானம் காட்டாதே
புலிக் களத்தில்
போராடிச் சாவது
துரோகம் மறுத்த தியாகமே
கடைசிப் புலியுள்ளவரைப் போராட விடு
இறுதியில் நான் புரட்சி செய்ய!
மருந்துக்கும் சரணடைவைப் பேசாதே-அது
மகத்துவமில்லாத துரோகம்-நீயும்
மக்களைக் கொல்
வேண்டியதைச் செய்
கொலைகளை உனது வீட்டிலிருந்து ஆரம்பி
எனினும்,நீ செய்வது
துரோகந்தாம் ஆனால் அஃது
சிங்கத்தின் துரோகத்தைப் போலன்று
ஏனெனில்
நீ கொலை செய்வதால் புலி
உனக்கான தேவை வேறானது
சிங்கம் பசிமறுத்து வேட்டையாடுவதால் அஃது வேறானது
நீ,பசித்திருப்பதால் புசிக்க
வேட்டையைத் தொடக்குகிறாய்-இது
அடிப்படையில் வேறான அளவுகோலுக்குள் அளக்கப்பட
புரட்சிப் போதனாச் சாலை புகட்டும் துரோகம் இஃது
துணிந்து நில்,
உனது கடைசிச் சகா வீழும்போது-நீ
சைனட்டைக் கையிலெடு
அதுவரையும் உன்னில் தியாகத் தீ எரிகிறது!

உனது கொலைகளுக்கான எனது தீர்ப்பு
துரோகமற்ற தியாகமென்று
நான் மட்டுமே பிரேரிப்பதால்-ஆவது
புரட்சிக்கான புதிய விடியல்
குடிகளுக்குள் வெடியை வைப்பதும்
கூன் விழுந்தவர்களைக்
கட்டாய இராணுவமாக்குவதும்
தியாகத்தைச் செய்வதற்கான தீராத தேசியம்
இது,தமிழுக்கு ஒரு ஈழத்தை அவாவுறுவதே
அதைப் பிரித்தறியும் புரட்சியின் சிறப்பு
தலை வணங்குகிறேன்
உன் துரோகம் மறுத்த தியாகத்துக்காகவும்
பாசிச வாதியாக நீ
இருந்தாலும் உனது புனிதக் கொலைகள்
வரலாற்றில் தியாகத் தீயை மூட்டியே சாம்பலாகும்!
இதனால்
நீயும் தலைவனே!
நீ தியாகி
உனது தியாமெங்கே
சிங்கத்துக்கு வாலாக நீளும்
எச்சில் நாய்களின் துரோகம் எங்கே?
ஆதலால் நாம்
உன் பாதத்தை நக்கி
மோனத்தில் வாழ்வதே
ஈழத்தின் வெற்றி
வாழ்க நீ புலியாக-வாழ்க!
ப.வி.ஸ்ரீரங்கன்
16.04.09
Sonntag, 12. April 2009
வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்...
நழுவிய கையும்.
சந்தர்ப்ப வாதம்,ஓடுகாலி,தப்பித்தல்
கழுவிய மீனில் நழுவிய மீனெனவும்
ஊருக்குள் உருண்டுவரும் மொழிகள் பிளந்து
உன்னையும் கற்கச் சொல்கிறாய்,...ம்!
"சரியோ பிழையோ" தெரியாது,
கருத்துச் சொல்வதும் தப்பித்தலும்
சரளமான தமிழ்ச் சேட்டைதாம்
நண்ப போதாதற்குப் புதைகுழி தோண்டி
செத்துப்போன பிணத்தை இழுத்துப்
புலிப் பாசிச மொழியை வெகுஜனவூடக
மொழிவாகக் கருத்தூன்றாதே, தனக்கு
மூக்கு நீளமெனும் ஒரு வாத்து
மீளத் துயர் விலத்தித் தும்முகிறது
இறுதிவரை பிணங்களாகும் உயிருள்ள
வாழ்வாசைகள் துரோகம் மறுத்தத்
தியாகக் கம்பத்தில் கஞ்சல் சேலையாய்
அழகுக் கோலம், வரலாற்று வெளியில்
கொலுவூன்றிக் கொடி நாட்ட!;
நீ,புதியவனாகச் "சரியானது
பிழையானதென" கூறமுடியாது தவிப்பதாகச்

சொல்வதில் எவரையும் காப்பதற்கில்லையே?
முத்திரைகள் பலவிதப்படும் துரோகி,
எட்டப்பர்,பொறுக்கி,நாய்கள்,உணர்ச்சிவசம்,
இத்தனைக்கும் மத்தியில் இவருக்கும்
அவருக்கும் தனிமனிதப் பழிவாங்கல்
பொருந்துவதற்கு அவரவரொடு கூடப் பிறந்திட்ட
"மக்கள் நலன்" விட்டுவிடாது!,
எல்லோர் கழுத்திலையும் துரோக அட்டைகளைத்
தொங்கவிடும் புலிப் பினாமிகளோ தமக்கெனப்
புரட்சி அட்டைகளை தொங்கவிடச் சொல்வதும்
நியாயமென உரைக்க நீ எதற்கு நண்ப?;
மற்றவர்களுக்கும் அழகான தொப்பிகளைத் தைக்கத்
தெரியும் என்பதற்காய் புரட்சிக் குத்தகை
ஏலமாவதில் எனக்கென்னவோ இலட்சம் புதைகுழிகளுக்கும்
தமிழீழம் கிடைத்துவிட்டதென்ற உணர்வொடு
ஊசலாட்டம்தாம்; உப்பிடுவது அதுதானே எமக்கு?
மனித உயிரை நேசிப்பது இருக்கட்டும் நண்ப
தவறைத் தவறெனச் சுட்டப் புலிக்கொடிக்குள் முகத்தைப்
புதைத்துப் புரட்டுவதற்கும் ஒப்பீடுகள் உனக்கெதற்கு?
உலகம் உருண்டைதாம் அதற்காக அது சிறுபிள்ளைப் பந்தா என்ன?
பருப்பு வேக வைப்பதோ அன்றி
ஓடிப்பிடித்து ஓணான் பிடிப்பதோ அல்ல,
நாம், இலட்சம் மக்களது உருண்ட தலைகள்கொண்டு
பந்து விளையாடுகிறோம்; போதாதற்குப் புரட்சிப் பாடலுடன்!
இப்போது,நீ கூறுவதெல்லாம் மனித நேசிப்புக்கானதென்கிறாய்
இதிலாவது நாணயத்தைக்கொண்டாயானால்-அதற்காகவாவது
விசுவாசமாக நடக்கக் கடவாய், அன்றியதையும்
புலிக்குத் தியாகங் கற்பிக்க,ஏகாதிபத்திய எதிர்ப்புக்
கூறெனவுண்டு இருப்பவர்கள் தலைகளையும் கூறுபோட்டு
அறுப்பதற்குப் பெயர் புரட்சி அல்ல!வேசங்களுக்கு மேடை
கொலைக் களத்தில் என்று எவர் சொன்னார்?சாகடிக்கப்படும்
உயிர்கொண்டு சரணாலாயம் கட்ட நீ எதற்கு?
பிழை சரியெனத் தெரியாது தவிக்கிறாய்,
விரைவில் கற்பதற்கும் காலத்தில் வாழு
மீதியை வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்
உனக்கும் எனக்கும் பாலங்கள் அமைத்து.
ப.வி.ஸ்ரீரங்கன்
12.04.09
Freitag, 10. April 2009
புதை குழிகள் குறித்துப் பாடம்
துரோகமும்!
தொப்பி அளவானதாக இருக்கலாம்
அதற்காக முள்முடியைத் தரித்து
அழகு பாப்பவர்கள் தமது செயலை
மற்றவர்கள் தவறெனச் சுட்ட முடியுமா?
ஆரம்பமே துரோகம்
இதுள் புதிதாகவும் துரோமெனப் புடுங்க
புரட்சிக்கான எந்தப் புண்ணாக்கு
புலிகள் போராட்டத்தில் உண்டு?
ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி

இடை வழியில் குவளை ஏந்த
சமாதிகளுக்குப் பின்னால் ஒளிந்தபடி
மேலும் புதை குழிகள் குறித்துப் பாடம்
நடாத்துகிறது புரட்சிக் கோஷ்டி
நீ,கருவினிலேயே குறைப்பட்டுள்ளாய்
அறிந்தவர்கள் உனது தாயினது கற்பத்தில்
உன்னைக் குறித்துப் பேசியதெல்லாம்
தாய்க்கு ஒரு பிள்ளையே ஒழிய
உனது எதிர்காலம் குறித்து அல்ல
நிலாக் காலத்தை நீ தரிசிக்க
விழி உனக்கு இடந்தராதவொரு
அகண்ட விகாரத்தால் நீ மண் தடவிக்
கோலமிட்ட முற்றத்தை அழித்தெறியும்போது
நீ பொறுப்பில்லைதான் கேடு விளைவித்தவர்கள்
உனது முற்றத்தில் கோலம் போடுவதற்கு முன்
உன்னைக் குறித்துச் சிந்தித்து இருக்க
அவர்களது ஆசை இடங்கொடுக்கவில்லை
நீ,கும்மிருட்டில் உலகத்தைத் தரிசிக்கிறாய்
உனது மனமோ உறை பனி வலயத்தின்
கரடியாக அலையவில்லை உன்னை ஈன்றவர்கள்
அங்ஙனம் இருக்கக் கடவரென நீ
உரைப்பதுமட்டும் அவர்களுக்கு எங்ஙனம் கேட்கும்?
அவர்கள் உன்னைக் குறித்தே விசாரனை செய்யாது
தம்மைக் குறித்த உலக அளவுகோலை
நிறுவுவதில் காலத்தைக் கொலை செய்தனர்
உன்னைக் குறைப் பிரசவமாக்குவதற்கு முன்
அட்டைக் கத்தி கொண்ட சேனைகளோடு
கோட்டையைப் பிடிப்பதற்குக் கோவணம் கட்டி
கடல் கடந்து கரச் சேவையில் ஈடுபடலாயினர்
இருப்பதையும் பறித்தவர்கள் உனது சத்திரச் சிகிச்சைக்காக
பொன்னள்ளிக் கொடுத்தபோது அதில் தமது சுமைகளை
உனது முதுகினில் ஏற்ற நீ முதுகெலும்பைத் தானமாக்க நேர்ந்தது

எகலைவன் துரோணருக்காகக் கட்டைவிரலைக்
காணிக்கை செய்தபோது குருபக்தியே அவனுக்கு அதிகமானதாகச்
சொன்னவர்கள் அவனது ஆயுளைப் பறிக்க அவிட்ட
அதே கதையோடு உன்னையும் இன்று காவு கொள்கின்றனர்
உன்னைப் பெற்றவர்கள் உலகைக் கடந்து
ஏதோவொரு சந்தியில் சில்லறை பொறுக்க
இன்னும் குறைப் பிரசவங்களுக்கான கருக்களை
சுமப்பதற்கான விந்துக்களை அந்நியர்களின்
ஆண்மைக்குள் ஒப்பந்தஞ் செய்ய
அதையும் உனது அநுபவத்தைக் கடந்து
இன்றைய துரோகங் குறித்தக் கேள்வி
ஆரம்பமே துரோகமெனும்போது
புதிதாகவும் துரோகம் நீ கற்பனைக்குள்
உந்தித் தள்ளுவதும் புரட்சியென அவிழ்ப்பதும்
குறைப் பிரசவத்தின் கோலந்தன் அழிவை
கோட்பாட்டில் அச்செடுப்பதற்கான முயற்சிதாம்!
ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி...
ப.வி.ஸ்ரீரங்கன்
10.04.09
Mittwoch, 8. April 2009
புலித் தளபதி தீபன்!
மொழியில்லை!
நீ, அடுக்கடுக்காக
வெற்றிகள் குவித்தபோது,
வண்ண வண்ணப் படங்கள் போட்டுப் பரப்புரை.
தமிழீழம் உனது மிடுக்கில்
கொலுவுற்றதாகவும் பலர் நம்பிக் கிடந்தனர் அன்று!
அந்தோ பரிதாபம்!

நீ, உயிரிழந்து
மல்லாந்து கிடக்கும் மண்ணைத் தவிர
இன்று,
உன்னைத் தொட்டுப் பார்க்கக்கூடத்
தமிழரால் முடியவில்லை!
உனது நாமத்தை
உச்சரிக்கக்கூட ஒருவனில்லை,
உப்பில்லாத ஊர் இது!
உயிரோடிருக்கும்போது
உன்னை,
உருபெருக்கக் காட்டிய ஊடகங்களுக்கு
உனது
மரணத்தைச் சொல்லவும் துப்பில்லை.
தூ...
சதிகாரக் கூட்டமே!
நீ, கொலைக் காரன்,
கொடுமையானவன்,
மக்களை வதைக்கத்
"துரோகி"
என்ற ஆயுதத்தோடு அலைந்தவன்!
எனினும்,
சிங்களக் காடையர் இராணுவத்தால்
அடிமைப்பட்ட நாம்
உனது மிடுக்கில் பெருமிதங்கொண்ட காலமொன்று
விழிமுன் தோன்றிச் சொரிகிறது நீராக!!
புரிகிறது!
இயக்கத்தினது நலனுக்காக
எவரையும் கொல்லும்
அந்தக் கொடுமையான தமிழ்மனது
கொல்லப்பட்டவர் குறித்துச் சொல்லாதுதாம்!
துன்பத்தில்,
பங்குகொள்ளாப் பணவேட்டைக்காரர்கள்
பாடையா கட்டுவார்கள்?
மக்களுக்குச் சொல்வதற்குக் கூட
உனது மரணம் விரோதமானதா?
அறியாத நேரத்தில்,
புரியாத களமொன்றில்,
சரிந்ததோ உனதுடல்?
உயிர் துறந்த
அந்தக் கணங்கள்
துரோகிகளென நீ
பலியெடுத்தவர்களது
கணத்துக்கு ஒத்ததாகவா உணர்ந்தாய்?
எத்தனையோ பொழுதுகளில்,
உனது
மிடுக்கை ஏலம் போட்டவர்கள்
தமிழீழத் தேசிய உறக்கத்தில்
உன்னை மறந்திட
துரோகத் தலைமைக்கு
சிரங்கொடுத்த உனது நிலை வீரமா
அல்லது
கோழைத்தனமா?
நினைவுக்காகக்
குறிப்பு எழுதுகிறேன்
அவ்வளவுதாம்!
காலம்,
எப்போதாவது
உன் மரணத்துக்கான தீர்ப்பைச் சொல்லும்.
அதுவரையும்,
உனது
மிடுக்குத் தமிழர்களது
தவித்த மனதுக்கும்,
சிங்களத்துக்
காட்டுமிராண்டி இராணுவ அச்சத்துக்குமான
ஒரு வடிகாலகவே இருந்திருக்கிறது என்றுரைப்பதில்
நான்
எதையும் இழக்கப்போவதில்லை!
நீ,கொடியவனாகவும்,
பாசிச வாதியாகவும் மாறினாய்.
மக்கள் படைத் தளபதியென
உன்னை எங்ஙனம் உரைப்பேன்?
எனினும்,
அமைதிகொள்!
அழிந்து விட்டாய்,
அற்ப அழிவு அரசியலில்
உன் மரணத்தின் தடமே மறைக்கப்பட்டுள்ளது!
மௌனித்த
உனது இதழில் மொழியில்லை,
நீ,
இப்போது தமிழனும் இல்லை,
சிங்களவனும் இல்லை-மனிதன்!
செயலால் இனங்காணும்
உனது உடலுக்குக் "கொலைக்காரன்" எனும் வரலாறு
மனதினது ஏதோவொரு உணர்வுத் தடத்தில்
குறிப்பெடுத்து நெஞ்சைக் கல்லாக்கிறது!
என்றபோதும்,
விழி பனிக்கிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2009
பின்னிரவு:01:11 மணி
Sonntag, 5. April 2009
இனியொரு பொழுதில்.
சிறு பொறிதெனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட
இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?
நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!
என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!
நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!
மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?

பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது
மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!
சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க
இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!
சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...
தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!;
இதையும் மறந்திடாதே!
ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09
Sonntag, 29. März 2009
வணங்கா மனிதங் குறித்து...
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்...
மலர்களைக் கொய்தவன் காசு பண்ண
தமிழீழ விடுதலை மனத்தில்
வித்துடலெனச் சொரியும் பூக்கள்
வன்னியில் குவளை ஏந்தும் சா பிணம்
குற்றுயிரைக் கொல்லப்படும்வரை கையிற் பிடிக்க!
தெருக்கள்தோறும்
புலிக்கொடி ஏந்தி
மண்டையில் புலித் தொப்பி வைத்து
மனமெல்லாம் கொலைக்கு இசைந்து
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என...

பிணங்களின் மீது உரிமைகள்
கொடிகளைக் கட்ட
உயிருள்ளோர் செத்தாக வேண்டும்
இனி,அடுத்தவர் எவர்?
அள்ளிக்கொண்டு
அரசியல் செய்யத் தேசியத் தலைவர்
அரு மருந்துண்ணார் அவர்
அடுத்தவர் குழந்தைகளுக்குச் சைனட்டு
தேசமெனுங் கொடிய மனம்
தன் வீட்டுத் திண்ணையுள் வீழ்ந்த
பிணங்கள் எண்ணிப் பட்டுவாடா
பாயின்றித் தரையில் வீழ்த்தப்பட்ட தலைகள்
"தமிழீழத்தின் விடியலுக்கு" முந்திய வித்து
வணங்காத மண்ணும்
தமிழீழம் தாகம் என்பதாய்
கப்பலோடும் எவரெவர் பெயரிலோ

மண் வணங்குகிறதோ இல்லையோ
நீ வணங்குகிறாய்
கொலைகளுக்குத் தியாகமுங் கற்பிக்கின்றாய்
கப்பல் கட்டுவதுமட்டும் மக்களைக் காப்பதில்லை
கொலைக்குமுன் வைத்திருக்கும் உயிர்களை விட்டுவிடு
மக்களைக் காப்பதென்று புலிக்கதை சொல்ல
இனியும் நடேசன்கள் தேவையா?
ப.வி.ஸ்ரீரங்கன்
29.03.09

