Samstag, 6. Februar 2010

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக்
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!

அன்னை.

எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
ஏதோவொரு தெருவில் நான்...

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல

மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர

அன்னை உயிர் குடித்த
காலனது கதை பகிர்ந்த
மருமகள்:"உடனடியாகப் போன் செய்யுங்க
மாமா"என...


முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்லும் அவள் மகள்-என் உறவுகள்!

அம்மா,உடல் சாய்த்து வான் பார்க்க
இரவல் வீட்டுத் தரையில் இறுதிப் பயணந் துவக்க
துவண்ட என் நெஞ்சு துன்பித்திருக்க
இரவல் அறியாது நாம் வாழ்ந்த மண்போன்றும்,
மனைபோன்றும் அன்னையின் நினைவு
மெல்ல விழியுள் நீர் சுரக்க

சின்னமடுமாதவின் ஒரு கோடியில்
பசுமைகொண்டிருந்த எனது முற்றம்,
சுற்றம் தொலைத்த அன்றைய இடர்முகம்
அன்னையில் மடியில் தவழ்ந்த சோகமென நான்...

அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்

வேடிக்கை மனிதன் ஆனேன்,
வேதனையைச் சொல்ல முடியாத குற்றம்
நெஞ்சினுள் அம்மா மரணத்தைப் புதைக்க
எனது மனைவிவழி உறவுகளுக்கே
அம்மாவின் மரணம் தெரியாது-இதுதான் நான்!

குற்றம்!அம்மாவைப் பார்க்காத குற்றம்
பொழுதெல்லாம் என்னைச் சிலுவையில் அறைய
சுற்றத்தோடு அன்னையின் இழப்பைப் பகிர்வதில்
எல்லையிட்டபோது என்னைத் தொலைத்திருந்தேன்

எனினும்,
பால்யப் பொழுதின் முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில் அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும் அரண்டு போய்
மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப்போன தருணத்தில் அன்னை முகந்தாங்கி
நினைவுத் தடமாக விரிய


பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்

என்ன சொல்வேன்?

அன்னை இனி வரமாட்டாள்.
அவளது இயக்கம் குலைந்துவிட்டது
தோன்றியதன் மூலத்திணிவு இன்னொரு திசையில்
இருப்பு விரிக்க இழப்பு எமக்காக...

புகலிடம்கொண்டு வருசம் இருபத்தி ஐந்து
என் கட்டையும் போய்விடும் இன்னுஞ் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத துக்கம்-இழப்பு?

தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
உயிர்கொண்டலையும் உடலுக்கும் இது பொருந்தும்?

என்றபோதும்,அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு

அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்துகிறது!

பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!

இப்போது,
அன்னையும் அப்பன் வழியில்...
எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
சின்னமடு மாதாவும் இல்லை அருகில்!

எல்லாம் இழந்த
இந்தப் பொழுதில் அம்மாவின் இறுதி நிகழ்வு
வெப் காமில் பார்த்து விழிபனிக்க
அக்காளினதும் தங்கையினதும் கண்ணீர்க் கோலம்
மூச்சையடக்க,
எனது இறுதிப் பொழுதை மெல்ல அழைக்கும் கால வரைவு!

என் சந்ததியின் தவிப்பில்
என்றோ ஓர் நாள் அழுகி நாறப்போகும் எனது உடலும்
இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில் அன்னையின் சோகம் காவி
அநாதைக் கோலம் கொண்டு விழி வான் பார்க்க
பனிவீழ்த்தும் வானமும் என்னை நகைக்கிறது!

அன்னை.

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை,
மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவியைத் தின்றது தீயும்!

"ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாமம்,படையாதே!-மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!"என்றான் பட்டினத்தான்

என் அன்னை அங்ஙனம் இருந்தவள்-வாழ்ந்தவள்
மூன்று மையில் கட்டை எனைச் சுமந்து சென்று
வைத்தியம் பார்த்த அவள் கால்கள் கட்டுண்டு கிடக்க
பாடைகொண்ட மோட்டார்க் கார் மெல்ல விலக
அம்மாவும் மறைந்தாள் இப்போ அப்பனைப் போல!

நானோ,அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழக்கின்றேன்.

அன்னை,அம்மாளாச்சியாய்...


ப.வி.ஸ்ரீரங்கன்

Montag, 28. Dezember 2009

செங்கதிர் சேகரா!

போர்-"ஆசிரியர்" பெரி-துவக்க...


புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து "உம்பால்" ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
"எங்கணாஅ!"பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
"வருவதோர் துன்பம் உண்டு"
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09

Dienstag, 17. November 2009

எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...

ஊனினை அழிக்க...
 
இன்றென் மூளையை அறுத்து
அவியலிட ஆசை கொண்டேன்
அலுப்புத் தட்டும்போதும்
அருவருப்பு ஏற்படும்போதும்
அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன்
 
முடியவில்லை!
 
எங்குமே எதிரிகளான சூழல்
 
புறமெங்கும் என் சாயலின்
மனிதர்கள் தொலைக்கப்பட்டார்கள்
எனக்கும் சாவுமணி அடிக்க
படையெடுக்கும்"அழகு மேனி"
 
எப்படி வாழ்வேன்?
எதையிட்டு மகிழ்வேன்?
 
என்னைத் தொலைத்த தெருவினில்
என் குழந்தைகள்
தம்மைத் தொலைக்க ஆயுத்தமாகின்றனர்
 
"கருப்பு" எச்சங்கள்
எல்லைப் புறத்தே தள்ளி வீசப்பட்டன
ஏதோவொரு மூலையில் என் இதயம் துடித்தது

என் சந்ததி
தொலைக்கப்பட்ட தம்
மூதாதையரைக் கண்டுகொள்ளவில்லை!
 
ஆங்கிலத்தில்
தனது அடையாளத்தைச் சொல்லிக்கொண்டது ஒரு அடிமை
தொலைந்தது
தானும் தன் சந்ததி என்பதையும் மறந்திருக்க
தெருமுனையில்
தன்னையே துரோகி என்றது இன்னொரு அடிமை
 
எப்படி எழுந்து மீள்வேன்?
 
எவருக்குமே என் சாவு தெரிந்திருக்கவில்லை
எல்லோருமே அதை வரவேற்றபோது
அவர்களிடமிருந்த முகங்கள் தொலைந்திருந்தன
 
எதன்பெயராலும்
எதன் பொருட்டும் என் தாயைக் கற்பழித்தேன்
வாழ்வதற்கு நியாயம் எனக்கு இருப்பதற்கு
 
அவளுக்கு நியாயம் சொல்லும்வரை
நான் அழிந்தே போக வேண்டும்
 
அந்தத் தடையமற்ற பொழுதின் திசையுள்
அவளது இருப்பு
தொடர் இருட்டில் நிலவக் கூடும்
 
அதற்காகவேனும்
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
17.11.2009

Sonntag, 15. November 2009

எல்லோருக்குமான ஒரு வீதியில்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
க்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...


 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 
கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009

Sonntag, 19. Juli 2009

பெனடிக் பதினாறுக்குப் பார்த்து இரங்கு!

கை உடைத்த போப்பும்
கர்த்தராகிய ஆண்டவரும்.
 
 
 
ன் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!
பரலோகத்திலிருக்கும் பிதாவே!!
ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?
விடுமுறைக்கு மெல்லச் சென்றவன்
உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்
பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது
உனக்குப் பொறுக்காதோ?
 
 
நீ,மனிதர்களைவிடக் கொடுமை நிறைந்த
ஏதோவொன்று!
உனக்கே பணிவிடை செய்வதற்காய்
எல்லோரையும் வருத்துவதில்
தள்ளாத வயதிலும் உன்னைச் சொல்லி
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சுகம் தேடும்
உனது தொண்டனைச் சித்திரவதை செய்யலாமோ?
 
 
உனக்குத் தொண்டூழீயஞ் செய்வதைத் தவிர
மீதியான பொழுதில்தாமே
தனது எஜமானர்களுக்கு அந்த அடிமை தொணடூழியஞ் செய்தது!
இதையும் அநுமதிக்க உன்கென்ன குறை?
எல்லோரது தயவுக்கும் தாட்சண்யத்துக்கும்
நீயே பாத்திரமானதாகக் காட்டுவதில்
நீ பொல்லாதவொரு பிறவி!
 




 
பிதாவே,என் ஆண்டவரே!
உன் அடிமைக்கும்-தூதுவனுக்குமான வித்தியாசம் என்ன?
உன்னைச் சொல்லி எல்லோருக்கும் ஆசீர்வாதஞ் செய்பவன்
கையை முறித்துவிட்டத்தில் நீ கொடியவன் கர்த்தரே!
 
 
கால்களில் விழுந்து
கடையர்களாகிய நம்மைக் கடைந்தேற்றக் கேட்கும் நாம்
நீயாகவே கண்டும்,ஏற்றும்
உனது தூதுவனைச் செபிக்கும் என் தலைமுறையை
இப்படி ஏமாற்றலாமோ?
 
 
என் ஆண்டவரே,
பரலோகத்திலுள்ள பிதாவே!
உனது தூதுவனை ஆசீர்வதித்தருள்வாய்!
உன் தூதுவனுக்கே காலைவாரிவிடும் உன்னை
எவரும் நம்பவேண்டுமென்பதற்காய்
வற்றிக்கானில் வாய் நடுங்கும் வயதிலும்
வார்த்தையாடும் உன் தூதுவனை நீ வருத்தலாமோ?
 


 
 
கல் நெஞ்சுக் கர்த்தரே,
கையை உடைத்த உன் தூதுவன்
பெனடிக்கு பதினாறுக்குப் பார்த்து இரங்கு!
 
 
பாதைகளில் தடங்கல்களை வைத்துப்
பார்த்து நடக்கும்படி அவனையும்
அப்பப்ப நீ மனிதனாக்குவதில்
"நீ"
கடவுள்தான் கர்த்தரே!
 
இப்படி எல்லாம்...
கர்த்தரே கனவைக் கலைத்து
மனித நிலைக்குப் போப்பாண்டவரை இறக்கிவிடாதே!
பின்பு
உனக்கான இருப்பு
இந்தப் பூமியில் நிலவுமென்று
கனவு காணாதே கர்த்தரே!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09

Montag, 1. Juni 2009

சிங்களத்து உச்சி பிளந்து...

துட்டக் கைமுனுவும்
எல்லாளனும்.



ந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!

இந்த வார்த்தைக்கு ஒரு நாள் இருந்திருக்கிறது,
அது தனது நாளையும் தொலைத்து
இன்னொரு இரவுக்குத் தவம் இருந்தபோது,
சூரியனின் சரிவில் வீழ்த்தப்பட்ட தலைகள்
வார்த்தைக்குச் சமாதிகட்டிக் கொண்டன.

அந்த வார்த்தைக்குத் தோதான
இன்னொரு வார்த்தை இனி மேலெழுவதற்கு,
வரப் போகும் இரவுகளில் முட்கம்பி வேலிகளில்
கிழிபடும் மனிதம் இடந்தரப் போவதில்லை.

வார்த்தைக்கு விருப்பங்கள் பலதாக இருந்திருக்கிறது,
மற்றவர்களைக் கொன்று வாழ முனையும்
ஒரு திசையில் அந்த வார்த்தை
"தமிழீழம்"என்று எமக்கு அர்த்தமாகியதா?

சிங்களத்து உச்சி பிளந்து
எல்லாளனைக் காட்டிய
அநுராதபுரத்தில் வீழ்ந்த தலைகள் பதினேழு,
வார்த்தைகளுக்கு அப்போதும் ஓய்வில்லை!

மாவீரர் உரை சொல்ல
துட்டக் கைமுனுவின் தலை பிளந்த
வரலாறு தேசியத் தலைவர் திசையில் வார்த்தைக்குப்
பெருமைப்பட்ட புல(ன்)ம் பெயர் புண்ணாக்குகள்.

வன்னிக்குள் மண்டியிட்ட
எல்லாளன் தலை பிளக்கத் துட்டக் கைமுனுக்குக்
கரம் கொடுத்தவர்களும் எல்லாளன் வாரீசுகள்தாம்
வார்த்தைக்கு இப்போது புதுவிளக்கம் சொல்ல




கைமுனுவுக்கும்
எல்லாளனுக்குமாகச் செத்தவர்கள்
அப்பாவி இலங்கைப் பஞ்சப்பட்டவர்கள்
அள்ளிய காசுகளில் அரைக்கு ஒட்டியாணம்
கட்ட முனையும் புலிப்பினாமிகளின் வீடுகளுக்கு
இன்னுமொரு தேசியப் பேயை வார்த்தைகொண்டு விடு!

வார்த்தை தனக்குள்ளே வருத்தல்களைப் புதைத்திருந்தது,
அதுவும் தன்னையும் மற்றவர்களையும் கொன்றபோது
தேசிய ஆன்மாவென்று தெருக் கரையில் நின்று,
அழுதுவடியும் கயவர் வார்த்தைக்குள் வதைபட்டவர்களை
வஞ்சித்து மோப்பம் பிடித்து வயிறு வளர்க்க
இன்னொரு பிரபாகரன் "எல்லாளனுக்கு" இரையாகணுமோ?


ப.வி.ஸ்ரீரங்கன்

01.06.2009


பிற்குறிப்பு:


2007 இன் மாவீரர் தினத்துக்கு உரை சொன்ன பிரபாகரன்,"சிங்களத்து உச்சி பிளந்து" எல்லானை அவர்களுக்குக் காட்டியதாகப் பெருமைப்பட்டார்.அநுராதபுர விமானப்படை தளத்துக்குப் பதினேழு கரும்புலிகள் சென்று தாக்கிய வெற்றிக்கு அவர் சொன்ன உரை அது.இதுள் சிங்கள ஆளும் வர்க்கத்து உளவியல் துட்டக் கைமுனுவின் வரலாறின் வழியிலேயே இயங்குகிறது.அது,வன்னிக்குள் மண்டியிட்ட எல்லாளன் தலையைப் பிளந்து"தேசியத் தலைவர்"தம் கூற்றை எதிர்கொண்டுள்ளதாக இவ் உளப்பாங்கை உணருவேண்டும்.

Samstag, 9. Mai 2009

The silence also is spitefully still.

Deadly Silence

(1)


They go, they come, go and come again,
you're not sure, it seems ever so quietly,
and suddenly in the peace of my songs
again, the siren screams, shrill annoying.


I listen to: whether they are more daring,
my cell is once again threatened?


On those nights, and from those days

will never be anything other than death.




We (Vanni residents) to wait in fear, hesitation and begin
petrifies is to give us the time Graus
and leaves me in previous ones do not escape
and not to the future.


The siren screams.


Are there any "Tamil Eelam" fairy tales, which end happily?
Believe the soul is hard,
often disappointed; comforting legends
lie to my sorrow no more.



It was rejected, what I crave,
and my prayer for peace is not heard.




Soothes and now the siren warns (...),
when they once again reflect the bother?



Crashes from the failure of the bolt down on me
at the moment, but because I want to be happy?
They go, they come, go and come again.
The silence also is spitefully still.

(2)


At midnight the Vanni mother wakes up in her grave.

The old woman has no face. Smell after your bones withered flowers.

In the bare skull to move the glowing eyes.


She uses her head: "I heard you call,Where are you son? "





I lie in the bunker,Mother,
Before my eyes, the death of her rusty spider web tense.
Blood drops of the rain shelter in the Vanni, a string of Sri Lanka!



"Come with me into the grave, son, Protect yourself so that I! "




Bird of the Vanni to disappear without trace in this day